Gold Rate: தங்கம் விலை என்றும் இல்லாத அளவுக்கு அதிரடி உயர்வு – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள். தற்போது இன்றைய (14.11.2022) தங்கத்தின் நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.
தங்கம் விலை
தமிழகத்தில் பொதுவாக தங்கத்தை வாங்க பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அத்துடன் கொரோனா காலத்திற்கு பிறகு தங்களின் சேமிப்பு பணத்தை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய தங்கத்தின் மீது தான் அதிக முதலீடுகளை மக்கள் செய்து வருகின்றனர். மேலும் வெளி நாட்டினரும் தங்கத்தின் மீது அதிக முதலீடு செலுத்துகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து அதன் விலையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இம்மாத தொடக்கத்தில் சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து படிப்படியாக தங்கத்தின் விலை உயர்ந்து தற்போது ரூ.39 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன்படி நேற்றைய தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.39,136 என விற்பனை செய்யப்பட்டது. இதே போல் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,892 என விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து கிராம் ரூ.4,900-ஐ தாண்டியுள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் புத்தாண்டு, பொங்கலுக்கு புதிய திட்டம் – ஆவின் நிறுவனத்தின் சிறப்பு வகை இனிப்புகள்!
Exams Daily Mobile App Download
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4,901-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, ரூ.39,208க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் 67.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ 67,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் காலங்களிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.