நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமில்லை.. விவரம் உள்ளே!
தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. இதனால் சாமானிய மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளியின் விலை மட்டும் சற்று மாற்றமடைந்துள்ளது.
தங்கம் விலை:
இந்தியாவில் தங்கத்தின் விலையானது கடந்த ஆண்டை காட்டிலும் சற்று அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு சவரன் தங்கம் விலை 43,000 – ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. இதனால் சாமானிய மக்கள் மற்றும் திருமணத்திற்கு நகைகள் வாங்குபவர்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த தங்கத்தின் விலை நாள்தோறும் தேசிய பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து ஏற்ற இறக்கம் அடைந்து வருகிறது. அந்த வகையில் இன்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலை குறைந்துள்ளதா? அல்லது ஏற்றம் அடைந்துள்ளதா? என்று நகைப்பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் சற்று மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தங்கத்தின் விலையானது இன்று ( ஜன.30) எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.
அதன் படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 42, 800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ. 5,350க்கும் விற்பனையாகி வருகிறது. மேலும் 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5, 712க்கும் ஒரு சவரன் 45,696க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை இன்று (ஜன. 30) கிராமுக்கு 50 பைசா உயர்ந்து ரூ.74.70 க்கும் ஒரு கிலோ ரூ.74,700 க்கும் விற்பனையாகி வருகிறது.