நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை…இன்று மீண்டும் உச்சத்தை தொட்டது – வருத்தத்தில் நகைப்பிரியர்கள்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வந்த நிலையில் நேற்று அதிரடி சரிவை கண்டது. ஆனால் இன்று மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து நகைப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.
தங்கம் விலை
தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த மாதத்தில் சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. ஆனால் இம்மாத தொடக்கத்தில் ரூ.41 ஆயிரத்தை தொட்டது. அதன்படி ஒவ்வொரு நாளும் படிப்படியாக உயர்ந்து, தற்போது ரூ.42 ஆயிரத்தை தங்கம் விலை தொட உள்ளது.
வாரத்தின் முதல் நாள் (ஜன.9) தமிழகத்தில் இத்தனை இடங்களில் பவர்கட்? – உங்கள் ஏரியா லிஸ்டில் இருக்கா!
இவ்வாறு தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே வருவது நகைப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை நேற்று அதிரடி சரிவை கண்டது. அந்த வகையில், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.41,520க்கு விற்பனையானது. ஆனால் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடி உயர்வை கண்டுள்ளது.
அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 31 உயர்ந்து ரூ.5,221க்கு விற்பனையாகிறது. இதே போல் ஒரு சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.41,768க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் வெள்ளியின் விலையும் அதிரடியாக 90 காசுகள் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.40க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 74,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.