இன்று ஒரே நாளில் 1,986 பேருக்கு கொரோனா உறுதி; 26 பேர் பலி – அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் மொத்த கொரோனா நிலவரம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் முன்னதாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு தீவிரமாக முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பல ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 1,986 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் தமிழகத்தில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை – தமிழக அரசு அதிரடி உத்தரவு!
இதனால் மாநிலத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,59,597 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று 26 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,076 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2,178 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 25,04,805 ஆக உள்ளது. இன்று மட்டும் 1,60,171 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 280 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 204 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் சென்னையில் இதுவரை மொத்தம் 5,38,152 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்ட்டுள்ளனர். தமிழகத்தில் 20,716 பேர் தொற்று பதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.