இந்தியாவில் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

0
இந்தியாவில் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக 163 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா நிலவரம்:

சீனா உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று வேகம் எடுத்து வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் மீண்டும் வீடுகளில் முடங்கியுள்ளனர். சீனாவில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒரு மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது உருமாற்றம் அடைந்துள்ள ஓமிக்ரான் வைரஸின் துணை வகைகள் தான் அதிகரிக்கும் பாதிப்புக்கு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இனி தமிழ்வழி சான்றிதழ் ஆன்லைனில் பெறலாம் – TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு!

இந்த நிலையில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா கொரோனா நோய் தடுப்பு பணிகளில் வேகம் காட்டி வருகிறது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 163 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் 4,41,46,781 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். அதனை தொடர்ந்து 2,423 பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். அத்துடன் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் மொத்தமாக 220.13 கோடி பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!