இன்று (அக். 25) சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு செல்ல 3,790 பேருந்துகள் இயக்கம் – பயணிகள் கவனத்திற்கு..!
தமிழகத்தில் நேற்று (அக்.24) தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப 3,790 பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
தமிழக மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நேற்று (அக். 24) மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விடுமுறைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் மக்களின் வசதிக்காக அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்தது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை நேற்று முடிந்த நிலையில் பலர் சென்னைக்கு மீண்டும் கிளம்பி வருகின்றனர். அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் பொதுவாக சென்னைக்கு இயக்கப்படும் 2,100 பேருந்துகள் மற்றும் கூடுதலாக 1,678 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,778 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விட்டுள்ளதால், பலர் நாளை சொந்த ஊருக்கு கிளம்ப திட்டமிட்டுள்ளனர். அதனால் நாளை (அக். 26) 2,954 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிகத்தில் நாளை (26.10.2022) இந்த பகுதிகளில் Power cut – மின்வாரியம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மேலும் இன்று சென்னைக்கு கிளம்ப 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், தீபாவளிக்காக சிறப்பு பஸ்கள் மூலம் 6 லட்சம் பேரும், ஆம்னி பஸ்கள் வழியாக 1.5 லட்சம் பேரும், ரயில்கள் மூலமாக 12 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கார், வேன், விமானம் மூலம் 1 லட்சத்திற்கு அதிகமானோர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.