பாரதியின் அரவணைப்பில் மகிழும் லட்சுமி, வீடு தேடி வந்த கண்ணம்மா – இன்றைய எபிசோடு!

0
பாரதியின் அரவணைப்பில் மகிழும் லட்சுமி, வீடு தேடி வந்த கண்ணம்மா - இன்றைய எபிசோடு!
பாரதியின் அரவணைப்பில் மகிழும் லட்சுமி, வீடு தேடி வந்த கண்ணம்மா – இன்றைய எபிசோடு!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இன்றைய எபிசோடில் லட்சுமி தன் அப்பா பாரதியுடன் சில நேரங்களை செலவிட அவரை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கும் கண்ணம்மா லட்சுமியை திரும்ப வீட்டுக்கு கூட்டி வர வேண்டும் என்று கிளம்புகிறார்.

பாரதி கண்ணம்மா

கடந்த ஒரு சில எபிசோடுகளுக்கு முன்னர் பாரதி பற்றிய உண்மையை அறிந்து கொண்ட லட்சுமிக்கு அவரை விட்டு விலக மனதே இல்லை. அதனால் ஹேமா கூப்பிட்டதும் உடனே பாரதி வீட்டுக்கு சென்ற லட்சுமி அங்கு உற்சாகமாக பொழுதை கழித்து வருகிறார். அந்த வகையில் இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடில் பாரதி, லட்சுமி மற்றும் ஹேமாவுக்கு கணக்கு சொல்லி கொடுக்கிறார். அப்போது பாரதியை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருக்கிறார் லட்சுமி. தொடர்ந்து கணக்கு பாடத்தில் இருந்து பாரதி கேள்வி கேட்க, அவரது முத்தத்தை பெறுவதற்காக லட்சுமி ஒவ்வொரு பதிலையும் கண்டுபிடித்து சொல்கிறார்.

ஆலியா மானசாவின் மூத்த மகள் ஐலாவின் 2வது பிறந்தநாள் கொண்டாட்டம் – ரசிகர்கள் வாழ்த்து!

மறுபக்கத்தில் மாவு அரைத்து கொண்டிருக்கும் கண்ணம்மாவிடம் வடிவு வந்து பேசுகிறார். அப்போது லட்சுமி, பாரதியை டாக்டர் அப்பா என்று கூப்பிடுவதாக சௌந்தர்யா கூறியதை சொல்லி வருத்தப்படுகிறார். ஒருவேளை லட்சுமிக்கு உண்மை தெரிந்திருக்குமோ, இது பற்றி பாரதியிடம் ஏதேனும் கேள்வி கேட்டு அவர் எதாவது சொல்லி விடுவாரோ என்று புலம்பி கொண்டிருக்கிறார் கண்ணம்மா. பிறகு லட்சுமியை பாரதி வீட்டில் இருந்து கூப்பிட்டு வர கிளம்புகிறார். இப்போது பாரதி ரூமில் வைத்து பேசிக்கொண்டிருக்கும் ஹேமாவிடம், பாரதி எங்கு தூங்குவார் என்று விசாரிக்கும் லட்சுமி இன்னைக்கு நான் அப்பாவின் பக்கத்தில் தூங்க போகிறேன் என்று நினைத்து கொள்கிறார்.

தொடர்ந்து பாரதி இருவருக்கும் கதை சொல்ல, ஹேமா அவரது பக்கத்தில் படுத்து கதை கேட்டு கொண்டிருக்கிறார். அப்போது, பாரதியை கூப்பிடும் லட்சுமி, டாக்டர் அப்பா நானும் உங்க கையில் தலையை வைத்து படுத்துக்கொள்ளட்டுமா என்று கேட்க அவர் வா என்று கூறி படுக்க வைத்துக் கொள்கிறார். குழந்தைகள் இருவரும் கதை கேட்டுக்கொண்டே தூங்க ரூமிற்கு வெளியே வந்து நிற்கும் கண்ணம்மா நான் லட்சுமியை கூப்பிட்டு போக வந்திருக்கிறேன் என்று சௌந்தர்யாவிடம் சொல்லி கொண்டிருக்கிறார்.

பாரதி கண்ணம்மா தொடரில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வருண் – பாரதிக்கு அனைத்து உண்மையும் தெரியவருமா?

அப்போது, தூங்காமல் முழித்திருந்து இதை கேட்கும் லட்சுமி, கண்ணம்மா வந்து கூப்பிட்டது தெரிந்ததும் நான் இப்போது தான் என் அப்பாவுடன் சேர்ந்து சாப்பிட்டு, சந்தோஷமாக இருக்கிறேன். இது அம்மாவுக்கு பிடிக்கவில்லையா என்று நினைத்து வருத்தப்படுகிறார். பிறகு தூக்கத்தில் இருக்கும் லட்சுமியை அடித்து எழுப்புகிறார் கண்ணம்மா. அதற்கு பாரதி சத்தம் போட என் குழந்தையை என்னிடம் கொடுக்க மாட்டிங்குறீங்க என்று சொல்லி வருத்தப்பட்டு விட்டு அங்கிருந்து கிளம்புகிறார் கண்ணம்மா.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!