கோபியை விட்டு மொத்தமாக விலகிய பாக்கியா, பரிதவிக்கும் குடும்பத்தினர் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
கோபியை விட்டு மொத்தமாக விலகிய பாக்கியா, பரிதவிக்கும் குடும்பத்தினர் - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கோபியை விட்டு மொத்தமாக விலகிய பாக்கியா, பரிதவிக்கும் குடும்பத்தினர் - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கோபியை விட்டு மொத்தமாக விலகிய பாக்கியா, பரிதவிக்கும் குடும்பத்தினர் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பரபரப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு பாக்கியா வெளியேறிய பாக்கியா, கோபியிடம் இருந்து விவாகரத்து வாங்கியுள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

பாக்கியலட்சுமி:

கடந்த சில வாரங்களாக பாக்கியலட்சுமி சீரியல் அடுத்து அடுத்து என்ன நிகழும் என்று எதிர்பார்ப்பில் கதை சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில எபிசோடுகளில் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி அவர் கேட்டரிங் நடத்தும் இடத்திற்கு சென்றிருந்தார். பாக்கியா கூடவே எழிலும், செல்வி அக்காவும் சென்றனர். இந்த நிலையில் வீட்டில் உள்ள அனைவரும் பாக்கியாவை நினைத்து மிகவும் கவலைப்படுகின்றனர். இன்னொரு புறம் ஈஸ்வரி அம்மா மீண்டும் பாக்கியாவை வீட்டிற்கு அழைத்து வர பாக்கியாவை பார்க்க செல்கிறார். அவருடன் எழிலும் கூட செல்கிறார். அதற்குள் இனியா பாக்கியாவிற்கு போன் செய்து வீட்டுக்கு வரும்படி சொல்கிறார். ஆனால் பாக்கியா அவரிடமும் நான் வீட்டுக்கு வரமாட்டேன் என்று பதில் சொல்கிறார்.

இந்த நிலையில் பாக்கியா, ராதிகாவை சந்தித்து நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்க இல்ல என்று கேட்கிறார். உடனே ராதிகா நான் தெரிஞ்சு இந்த தப்ப பண்ணல, என்னை மன்னிச்சிடுங்க பாக்கியா- னு மன்னிப்பு கேட்கிறார். இதற்கு பிறகு கோபியின் வீட்டிற்கு செல்கிறார் பாக்கியா. வீட்டில் உள்ள அனைவரும் பாக்கியா திரும்பி வந்ததை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் பாக்கியா ஒரு முடிவுடன் தான் வீட்டிற்கு வந்திருக்கிறார். பாக்கியா கோபிக்கு விவாகரத்து கொடுக்க சம்மதித்து கோர்ட்டுக்கு செல்ல கோபியை அழைக்கிறார். இதனை கேட்டு வீட்டில் இருக்கும் அனைவரும் பாக்கியாவா இப்படி பேசுவது என்று அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். பாக்கியாவின் மாமியார் ஈஸ்வரி அம்மா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் பாக்கியா கோர்ட்டிற்கு செல்கிறார். அவருடன் எழிலும் செல்கிறார். ஒரு வழியாக கோர்ட்டில் விசாரணைகள் முடிந்து கோபிக்கும், பாக்கியாவுக்கும் கோர்ட் விவாகரத்து வழங்கியது.

கதிரை மன்னிக்கும் மூர்த்தி, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்

Exams Daily Mobile App Download

இதனால் கோபி உனக்கு என்ன அவ்வளவு திமிரு என்று கோபத்தில் பாக்கியாவை திட்டி தீர்க்கிறார். அதன் பின்வீட்டுக்கு செல்லும் கோபியிடம் வீட்டில் உள்ள அனைவரும் பாக்கியா எங்கே என்று கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். இனியாவும் அம்மா எங்க என்று கேள்வி கேட்கிறார். இந்த நேரத்தில் பாக்கியா வீட்டிற்குள் நுழைய கோபி கோபத்தில் வீட்டை விட்டு வெளியே போக சொல்லி கத்துகிறார். வீட்டில் இருப்பவர்களும் பாக்கியா விவாகரத்து கொடுக்க சம்மதித்தது குறித்து கேள்வி மேல் கேள்வி கேட்க பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். கோபி வீட்டை விட்டு வெளியேற சொல்லும் போது பாக்கியா கோபத்தில் கோபியை திட்டி தீர்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் பாக்கியா எதுவும் பேசாமல் இருந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு விறுவிறுப்புடன் பாக்கியலட்சுமி கதை களம் செல்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!