இன்று மற்றும் நாளை பொதுமுடக்கம் அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

0
இன்று மற்றும் நாளை பொதுமுடக்கம் அமல் - மாநில அரசு அறிவிப்பு!!
இன்று மற்றும் நாளை பொதுமுடக்கம் அமல் - மாநில அரசு அறிவிப்பு!!
இன்று மற்றும் நாளை பொதுமுடக்கம் அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் வார இறுதி நாட்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பொதுமுடக்கம் அமல்:

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோய்த்தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகம், மராட்டியம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மிக அதிக அளவிலான கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மிக கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 25ம் தேதி (நாளை) முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!!

அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வார நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையிலும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. இதனால் இன்று (ஏப்ரல் 24) முதல் கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

முழு ஊரடங்கின் பொழுது அனைத்து வகையான கல்வி, அரசியல், பொழுதுபோக்கு வளாகங்கள் திறக்கவும், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கின் பொழுது அத்யாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி சரக்கு மற்றும் தொழில் சேவைகளுக்கான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மே மாத இறுதியில் கொரோனா பரவல் குறையும் – ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு!!

சாலை போக்குவரத்து கழகம் மாநிலத்தின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தற்போது முழு ஊரடங்கின் பொழுது பெங்களுருவில் மெட்ரோ ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு எச்சரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!