உஷார் மக்களே.. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!

0
உஷார் மக்களே.. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!
உஷார் மக்களே.. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!
உஷார் மக்களே.. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன்‌ கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

கிழக்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக நவம்பர் 1 முதல் 5 வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் ஓரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதே போல புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் டிச.05ம் தேதி தென் கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்‌. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில்‌ நகர்ந்து வலுவடையும். மேலும் இது டிசம்பர்‌ 8ம் தேதி தமிழக மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கார்டு.. வங்கி கணக்கு எண் இணைப்பு – அரசின் முக்கிய உத்தரவு!

Exams Daily Mobile App Download

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌.நகரின் ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!