திருப்பதி செல்ல திட்டமிடுவோர்களின் கவனத்திற்கு – 8 மணி நேரம் வரை காத்திருக்கும் பக்தர்கள்!

0
திருப்பதி செல்ல திட்டமிடுவோர்களின் கவனத்திற்கு - 8 மணி நேரம் வரை காத்திருக்கும் பக்தர்கள்!
திருப்பதி செல்ல திட்டமிடுவோர்களின் கவனத்திற்கு - 8 மணி நேரம் வரை காத்திருக்கும் பக்தர்கள்!
திருப்பதி செல்ல திட்டமிடுவோர்களின் கவனத்திற்கு – 8 மணி நேரம் வரை காத்திருக்கும் பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச நேரடி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனால் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாமல் ஆதார் அட்டையை காண்பித்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதனால் கிராமப்புறங்களில் உள்ள பக்தர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. அந்த வகையில் பக்தர்களுக்கு தற்போது நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பக்தர்கள் டிக்கெட்டு வழங்கப்படாமல் பக்தர்களின் ஆதார் கார்டை பயன்படுத்தி அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ரயில்வே துறையில் 2900+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

அதன்படி இவர்கள் ஏழுமலையான் கோவில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவர்கள் 8 மணி நேரம் காத்திருந்த பிறகு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பக்தர்கள் அலிபிரி, வைகுண்டம் நடைபாதைகளில் அதிகளவு வருகை புரிகின்றனர். அதன் காரணமாக வாராந்திர சேவைகள் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!