தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 1 முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வை சுமார் 8.69 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். மேலும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த மாதம் மே 5ல் தொடங்கி வரும் மே 31ல் முடிவடைகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 8.85 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இதில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 200 பள்ளிகளில் இருந்து 19 ஆயிரத்து 867 மாணவ, மாணவிகள் எழுதி உள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வணிகவியல், பொருளியல் மற்றும் புள்ளியியல் உட்பட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்து விட்டன. இந்நிலையில் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்தது. எனவே மே 28 ஆம் தேதியான இன்று முக்கிய பாடமான தொழிற்படிப்பிற்கான தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்தது. இந்நிலையில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 31ம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது.
தமிழகத்தில் இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது – வானிலை ஆய்வு மையம் தகவல்!
ஏற்கனவே அறிவித்திருந்த படி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வரும் ஜூன் 1 ல் தொடங்குகிறது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி, காடச்சநல்லூர் எஸ்.பி.கே., பள்ளி என இரண்டு மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.