இந்திய விண்வெளி துறையில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – இஸ்ரோ முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள விண்வெளி துறையில் உள்ள பிரிவு “பி” மற்றும் “சி” பதவிகளுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் அவரவர் மாநில மொழிகளிலேயே எழுதி கொள்ளலாம் என்று பரிசீலிப்பதாக இஸ்ரோவின் சார்பில் பரிசீலிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
விண்வெளி துறை:
இந்தியாவில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் நாட்டில் பல பட்டதாரிகள் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இது தவிர அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப் பட்டு நேரடி வகுப்புகள் துவங்கப் பட்டது. மேலும் இந்த முறை பொதுத் தேர்வுகளும் நடைபெற உள்ளது. மேலும் நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த பின்னர் தற்போது மத்திய மற்றும் அனைத்து மாநில அரசின் சார்பில் வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் இந்திய அரசின் தொன்மையான விண்வெளி ஆராய்ச்சி நிலையமாகும். இது 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நிறுவப்பட்டது. மேலும் இது தான் உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து, புதிய மேம்பட்ட விண்வெளி தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றை நாட்டு நலனுக்காக பயன்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் இயங்கி வரும் விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் இரண்டு பணி நியமன அறிவிக்கைகள் வெளியிடப் பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை மற்றும் நாகர்கோவிலில் அதற்கான எழுத்து தேர்வுகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடந்த நிலையில், தமிழிலும் தேர்வுகளை நடத்த வேண்டும் என விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாக இயக்குனருக்கு கடந்த 20ஆம் தேதி மதுரையை சேர்ந்த எம்.பி. சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அந்த வேண்டுகோளில், பீட்டர் மற்றும் வெல்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு தமிழ்வழிக் கல்வியில் ஐடிஐ பட்டப்படிப்பு முடித்தவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகம் தேர்வு எழுதி வருகின்றனர். அதனால் தற்போது நடந்து முடிந்த தேர்வுக்கு மறுதேர்வு வைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதனை கருத்தில் கொண்டு அந்த நிறுவனத்தின் இயக்குநர் அழகுவேலு, விண்வெளித்துறைக்கு பிரிவு “பி” மற்றும் “சி” பதவிகளுக்கான தேர்வுகளை, மாநில மொழிகளிலும் நடத்த பரிசீலிக்க இருப்பதாக கூறியுள்ளார்.