தமிழக இருசக்கர & நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – காப்பீட்டு பிரீமியம் உயர்வு!
தமிழகத்தில் இரு சக்கர வாகனம், கார் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு தொகை கடந்த 2 வருடங்களாக உயர்த்தப்படவில்லை. இதையடுத்து தற்போது காப்பீட்டு பிரீமியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, வருகிற ஜூன் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.
காப்பீடு பிரீமியம்:
தமிழகத்தில் இரு சக்கர வாகனம், கார் உட்பட அனைத்து வகையான வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஏனெனில் வாகனத்தை ஓட்டும் போது விபத்து ஏதேனும் ஏற்பட்டால் விபத்து ஏற்பட்டவரின் உடமைக்கோ, உயிருக்கோ பாதிப்பு ஏற்படும் போது, மூன்றாம் நபர் காப்பீடு அளித்த நிறுவனம் இதற்கான இழப்பீடு தொகையை அந்த பாதிக்கப்பட்டவருக்கு வழங்குகிறது. இந்த காப்பீடு தொகையை வருடத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த தொகை 2 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.
Exams Daily Mobile App Download
இதையடுத்து தற்போது காப்பீடு தொகையை மத்திய அரசு உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காப்பீடு தொகை வழக்கமாக இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் உயர்த்தப்படும். ஆனால் இம்முறை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மற்றும் காப்பீடு ஆணையத்தின் ஆலோசனையின் பெயரில் இந்த ஆண்டுக்கான காப்பீட்டுதொகை உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவித்தாவது, கடந்த 2019 முதல் 2020ம் ஆண்டில் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான 1000 சி.சி வரையிலான இயந்திர திறன் உடைய கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் தொகை 2094 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
TET தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? முக்கிய தகவல்கள் இதோ!
இதனை தொடர்ந்து 1000 சி.சி முதல் 1500 சி.சி வரையிலான கார்களின் பிரீமியம் தொகை 3416 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் இருசக்கர வாகனங்களில் 150 சி.சி முதல் 350 சி.சி இயந்திர திறன் உடைய வாகனங்களுக்கு 1,366 ரூபாய் மற்றும் 350 சி.சி மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ.2804 பிரீமியம் தொகை செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரக வாகனங்களுக்கு ரூ.35,313 மற்றும் 40 ஆயிரம் கிலோவுக்கு மேற்பட்ட சரக்கு ரக வாகனங்களுக்கு 44,242 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கல்வி நிறுவனங்களுக்கான பேருந்துகளுக்கு 15% மற்றும் பழங்காலத்து கார்களுக்கு 50% பிரீமியம் தொகையில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.