தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – தவறாமல் படிங்க!
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டை வைத்து உள்ளவர்கள் ஏதேனும் சூழ்நிலையில் பொதுமக்கள் தங்களின் ரேஷன் கார்டுகளை தொலைத்து விட்டால் அதனை எவ்வாறு மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் ரேஷன் அட்டை தற்போது ஒரு வாழ்வாதாரமாக மாறி விட்டது. மேலும் ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களை வைத்து தான் சாமானிய மக்கள் தங்களின் குடும்பங்களை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக அரசும் பல நன்மைகளை ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தை வாட்டி வதைத்த கொரோனா பரவலின் போது ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு ரூபாய் 2000 பணம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொங்கல் பரிசும் வழங்கப்பட்டது. அடுத்தாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்க இருப்பதாக தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டு உள்ளது.
ExamsDaily Mobile App Download
இந்த நிலையில் தற்போது புலம்பெயர்ந்து வாழும் மக்கள் திடீரென தங்களது ரேஷன் கார்டுகளை தொலைத்து விட்டால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா உடனே ஆன்லைனில் ஈசியாக விண்ணப்பிப்பது எப்படி என்பதை கீழே விவரமாக பார்ப்போம். தொலைத்தவர்கள் கையில் செல்போன் இருந்தால் போதும் இந்த வேலையை வெறும் 20 நிமிடத்தில் முடித்து விடலாம். அதற்கான படிகளாக, 1. தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான அதன் பின்னர் https://www.tnpds.gov.in/ சென்று லாகின் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து, இப்போது பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு ஒடிபி எண் வரும். அதனைக் கொண்டு சுயவிவர பக்கத்திற்கு உள்நுழையவும்.
தமிழகத்தில் மே 8ம் தேதி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான டேப்-ஐ பார்ப்பீர்கள். மேலும் இதில் கூடுதல் வசதிகளான பெயர் நீக்குதல், மாற்றுதல், சேர்த்தல் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் அதில் தங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுத்து அதன் பின்பு PDF ஃபைலை சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.அதன் பின்பு அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். அடுத்தாக, தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால் போதும் தங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற ஹெல்ப்லைனில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.