தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு நாளை முதல் தொடக்கம் !
கொரோனா தொற்று காரணமாக முடங்கி இருந்த அனைத்து பணிகளும் தமிழகத்தில் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது. அதில் தமிழகத்தில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான உடல் தகுதி தேர்வானது நாளை முதல் சென்னையில் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும்.
969 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு:
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 ஆண்-பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு கடந்த ஜனவரி மாதம் எழுத்து தேர்வு நடந்தது. இதில் சுமார் 5,500 பேர் தேர்வானார்கள். அவர்களுக்கான உடல் தகுதி தேர்வானது கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
TNUSRB SI Taluk உடற்தகுதி தேர்வு 2020 – முழு விவரம்
உடல் தகுதி தேர்வு நாளை முதல் தொடக்கம் !
ஒத்திவைக்கப்பட்ட உடல் தகுதி தேர்வானது நாளை (30-ந் தேதி) முதல் வரும் அக்டோபர் 12-ந் தேதி வரை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களும், கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இத்தேர்வுக்குரிய ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download PMT Call Letter 2020
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்