TNUSRB போலீஸ் தேர்விற்கான பாடத்திட்டம் & தயாராகும் முறை – முழு விவரங்கள் இதோ!
TNUSRB போலீஸ் தேர்விற்கு என்னென்ன பாடத்திட்டங்கள் இருக்கின்றன, தேர்விற்கு எளிமையாக தயாராவது எப்படி, தேர்வு முறை குறித்தான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNUSRB போலீஸ் தேர்வு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவலர் துறையில் உள்ள பணியிட விவரம் குறித்தான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இரண்டாம் நிலை காவலர் பணிக்கு மொத்தமாக 3,552 காலிப் பணியிடங்கள் உள்ளன. அதாவது, இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் அனைத்தும் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன. இந்த காவலர் பணிக்கான எழுத்து தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும் முதல் பகுதியான தமிழ் மொழித் தகுதி தேர்வில் தேர்வாளர்கள் கட்டாயமாக 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
இல்லையெனில் முதன்மை தேர்விற்கு தேர்வாக முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ் மொழித் தகுதி தேர்வில் இலக்கணம் என்று எடுத்துக்கொண்டால் எழுத்து, சொல், பொருள், பொது, யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத் திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து எழுதுதல், மொழிபெயர்ப்பு ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். அதே போல இலக்கியம் பகுதிகளில் திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியம், புதுக்கவிதை, மொழிப்பெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை தெளிவாக படித்திருக்க வேண்டும்.
வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் விடுமுறை – மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
மேலும், தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் பகுதியை எடுத்து கொண்டால் தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, உரைநடை, தமிழ் தொண்டு, சமுதாயத் தொண்டு ஆகியவற்றில் இருந்து வினாக்கள் இடம்பெறும். அடுத்ததாக, இரண்டாம் பகுதியாக நடைபெறும் முதன்மை எழுத்துத் தேர்வு 70 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதாவது, முதன்மை எழுத்துத் தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 45 வினாக்களும், உளவியல் பகுதியில் இருந்து 25 வினாக்களும் என மொத்தமாக 70 வினாக்கள் கேட்கப்படும்.
பொது அறிவு என்று எடுத்துக்கொண்டால் இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு & ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றில் இருந்து கேள்விகளும், உளவியல் என்று எடுத்துக்கொண்டால் தொடர்பு அல்லது தொடர்புகொள் திறன், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களைக் கையாளும் திறன் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். மேலும், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தங்கங்களை தெளிவாக படித்தாலே எந்தவித குழப்பமும் இல்லாமல் தேர்வு எழுத முடியும்.