TNUSRB Police Constable PET தேர்வு 2021 – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 2 ஆம் நிலை காவலர், சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல் உள்ளிட்ட திறனாய்வு சோதனை குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
உடல்திறன் தேர்வு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB), தமிழக காவல்துறையில் பணிபுரிய தகுதியுடைய நபர்களை தேர்வு செய்யும் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இதன் கீழ் காவலர், சார்பு ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், தமிழக அரசின் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையிலுள்ள தீயணைப்பு வீரர் பணியிடத்திற்கும், சிறைத்துறை காவலர் பணியிடங்களுக்கும் தகுதியான நபர்களை எழுத்து, திறன் அடிப்படையில் தேர்வு செய்து வருகிறது.
ஜூலை 27 வரை 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – ஆஸ்திரேலியா அரசு!!
அந்த வகையில் மேற்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வானது தமிழகத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள வெவ்வேறு மையங்களில் நடைபெறுவது வழக்கம். அதே நேரத்தில் சப் இன்ஸ்பெக்டருக்கான தேர்வு மட்டும் தலைநகர் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு பொது அறிவு, உளவியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு, அதில் தேர்வர்கள் 40 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இந்த அடிப்படையில் இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் உள்ளிட்டவைகள் ஜூலை 26 ஆம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள 20 மையங்களில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கான அழைப்பு கடிதத்தை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.