TNUSRB ல் 3500+ Constable காலிப்பணியிடங்கள் 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆன Tamil Nadu Uniformed Staff Recruitment Board (TNUSRB) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Police Constable, Jail Warder and Fireman பணிக்கென மொத்தம் 3,552 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- TNUSRB அறிவிப்பின் படி மொத்தம் 3552 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் காவல் துறைக்கு 2180 இடங்களும், புலனாய்வுத் துறையில் 1091 இடங்களும், சிறைத் துறையில் 161 இடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 120 இடங்களும் காலியாக உள்ளன.
- July 1, 2022 தேதியின் படி, போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டர் மற்றும் ஃபயர்மேன் போன்ற அனைத்து காலியிடங்களுக்கும்வயது வரம்பு 18 முதல் 26 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. SC/ST/BC/MBC இடஒதுக்கீடு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு/எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
- TNUSRB தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படும். எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் என்சிசி, என்எஸ்எஸ், ஸ்ப்ராட்ஸ்/கேம்ஸ் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக் கட்டணமாக ரூ.130/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.