TNSURB Police Constable தேர்வில் முறைகேடு !!! – தேர்வானவர்களின் நிலை என்ன ???

0

2019ம் வருடம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான (இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன் மற்றும் தீயணைப்புத் துறையினர்) தேர்வில் ஒரு குறிப்பிட்ட தனியார் தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாக உயர்நீதி மன்றத்தில் தேர்வர்கள் 15 பேர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் இது குறித்து சிபிஐ விசாரணை தேவை எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வழக்கு விபரம்:

அவர்கள் தொடர்ந்த வழக்கில், கடந்த பிப்ரவரி 2ம் தேதி இந்த தேர்வுக்கான தற்காலிக தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வேலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1019 பேரும், விழுப்புரத்தில் இருந்து 763 பேரும் தேர்வாகி உள்ளனர். மீதமுள்ள மாவட்டங்களில் தேர்வு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

மேற்குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே அதிகளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர் எனவும், அவர்கள் அனைவரும் ஒரே மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த தேர்வில் இடஒதுக்கீடு முறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. இது குரூப் 4 முறைகேட்டை விட பெரியது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் தேர்வு முறைகேடுகளுக்கு கண்டனத்தை பதிவு செய்து, இது குறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டார். மேலும் அதுவரை தேர்வு நடைமுறைகள் எதுவும் நடைபெறக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!