TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு – சிலபஸ் பற்றிய முழு விவரம் இதோ!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் தேர்விற்கான பாடத்திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.
TNUSRB பாடத்திட்டம்:
தமிழக காவல்துறையின் ஓர் அங்கமான தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறை, சீருடை துறை, மற்றும் தீயணைப்பு துறையில் உள்ள பதவிகளுக்கு ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்து வருகின்றனர். மேலும் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் 30-ம் தேதி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக காவல்துறையில் உள்ள 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு, வருகின்ற ஜூலை 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது.
தமிழக தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை – 8ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
காவலர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான எழுத்து தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழி தகுதி தேர்வு, இதை 40% மதிப்பெண்கள் எடுக்கவேண்டும். இல்லையென்றால் முதல் தாள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இந்த பகுதி 80% மதிப்பெண்களுக்கு நடைபெறும். தமிழ் மொழி தகுதி தேர்வில் இலக்கணம் – எழுத்து, சொல், பொருள், பொது, யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத் திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து எழுதுதல், மொழிபெயர்ப்பு, இலக்கியம் – திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியம், புதுக்கவிதை, மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவை, மேலும் தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் – தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழர் பண்பாடு, உரைநடை, தமிழ் தொண்டு, சமுதாயத் தொண்டு இவை அனைத்தும் தமிழ் தகுதி தேர்வுக்குரிய பாடப்பகுதியாகும்.
இரண்டாம் பகுதியாக முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் அடுத்த செயல் முறை தகுதி தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இத்தேர்வு 70 மதிப்பெண்களுக்கு நடைபெறும். பொது அறிவு – இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு & ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் இடம்பெறும். உளவியல் – தொடர்பு அல்லது தொடர்பு கொள் திறன், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களைக் கையாளும் திறன் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். கணிதம் – சுருக்குக, மீ.பெ.வ & மீ.சி.ம, எண்ணியல், விகிதம், சதவீதம், சராசரி, வயது கணக்குகள், லாபம் & நட்டம், நேரம் & வேலை, சங்கிலி தொடர், குழாய் & தண்ணீர் தொட்டி, தனிவட்டி, கூட்டு வட்டி, அளவியல், பரப்பளவு, கன அளவு, புள்ளியியல், கோணங்கள், இயற்கணிதம், தரவு கணக்கீடு ஆகியவை கணித பகுதியில் கேட்கப்படும் முக்கிய தலைப்புகளாகும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்