TNUSRB PC தேர்வர்களுக்கு மதிப்பெண் பற்றிய முக்கிய அறிவிப்பு – தகவல் வெளியீடு!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காவல்துறை காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தேர்வு மற்றும் மதிப்பெண்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
TNUSRB:
தமிழக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களை கொண்டு நிரப்பப் பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன் தொடர்ச்சியாக விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. தேர்வானது ஜூன் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை TNUSRB PC தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் மாநகர ஆயுதப்படை பிரிவில் 2,180 காலியிடங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் காலியிடங்கள் 1091, சிறை காவலர் பிரிவில் 161 காலியிடங்கள் மற்றும் தீயணைப்பாளர் பிரிவில் 120 காலியிடங்கள் என்று மொத்தம் இரண்டாம் நிலை காவலர் பணியில் 3,552 காலிப்பணியிங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இந்த காவலர் தேர்வில் NCC அல்லது NSS மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்களாக மொத்தம் 6 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான இடமாறுதல் கலந்தாய்வு எப்போது? புதிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
இந்த ஆண்டு முதன்மை தேர்வுக்கான மதிப்பெண்கள் 80 லிருந்து 70 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த கட் ஆப் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் போட்டி கடுமையானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு தேர்வில் தமிழ் மொழி தகுதி தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியம்.