TNUSRB காவலர் உடல் தகுதித்தேர்வு நாளை மறுநாள் தொடக்கம் – கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!
தமிழகத்தில் சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் போன்றவர்களுக்கான 2ம் கட்ட தேர்வான உடல்தகுதி தேர்வு வரும் ஜூலை 26ம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. உடல்தகுதி தேர்விற்கு வரும் தேர்வர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
காவலர் உடல் தகுதித்தேர்வு:
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு அந்தந்த துறை தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறது. அதன்படி காவலர்களுக்கும் எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சியடைந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கபடுகிறது. அதன்படி தமிழகத்தில் சிறைக் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் போன்ற 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2ம் கட்ட தேர்வான உடல் தகுதித்தேர்வு, கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை கடந்த ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டது.
ஜூலை 26 முதல் 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
அதே சமயம் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கியதால் அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. அதனால் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் ஊரங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் ஒத்திவைக்கப்பட்ட உடல் தகுதித்தேர்வை நடத்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 2ம் கட்ட தேர்வான உடற்தகுதித் தேர்வு வரும் ஜூலை 26ம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
ஆதார் எண் மூலம் வங்கி கணக்கில் பணம் எடுக்க முடியுமா? ஆணையம் விளக்கம்!
இந்த தேர்வில் பங்கேற்பவர்கள் அனுமதி சீட்டுடன் வர வேண்டும் என்றும் 4 நாட்களுக்கு முன் பரிசோதனை செய்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. கல்வித் தகுதியின் உண்மை சான்றிதழ்களையும், அதன் நகல்களையும் கொண்டு வர வேண்டும். மேலும் மின்னணு சாதனங்களை தேர்வர்கள் மைதானத்தில் பயன்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.