TNUSRB தேர்வர்களுக்கான இணையவழி உதவி மையம் – அறிவிப்பு வெளியீடு!

0
TNUSRB தேர்வர்களுக்கான இணையவழி உதவி மையம் - அறிவிப்பு வெளியீடு!
TNUSRB தேர்வர்களுக்கான இணையவழி உதவி மையம் - அறிவிப்பு வெளியீடு!
TNUSRB தேர்வர்களுக்கான இணையவழி உதவி மையம் – அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு கடந்த 7ம் தேதி முதல் பதிவு மேற்கொள்ளலாம். இந்த விண்ணப்ப பதிவில் ஏற்படும் சந்தேகங்களுக்கு இணையவழி உதவி மையம் இயங்கும் என்று திருவாரூர் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

காவலர் தேர்வு

தமிழகத்தில் காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில், காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு வாயிலாக 444 காலிப்பணியிடங்கள் நிரப்ப கடந்த ஜூன் 25 மற்றும் 26ம் தேதிகளில் அறிவித்தபடி தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

PM கிசான் பயனாளிகள் கவனத்திற்கு – செப்டம்பரில் 12வது தவணைப்பணம்? முழு விபரம் இதோ!

அத்துடன் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடந்த 7ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.  இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் http://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இத்தேர்வு மூலமாக 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 15ம் தேதி கடைசி நாளாகும்.

Exams Daily Mobile App Download

மேலும் இத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது எழும் சந்தேகங்களுக்கு திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட போலீஸ் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இவர் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் தரை தளத்தில் வருகிற 15ம் தேதி வரை சந்தேகங்களை கேட்டறியலாம் என்றும் கூறியுள்ளார். அத்துடன் சந்தேகங்களை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை கேட்டறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!