TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் உடற்தகுதித்தேர்வு ஒத்திவைப்பு – முக ஸ்டாலின் கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் (TNUSRB) சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் ஒத்திவைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
TNUSRB தேர்வுகள்:
தமிழகத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) சார்பாக இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10906 காலிப்பணியிடங்களுக்கான உடற்தகுதி நேர்முகத் தேர்வுகள் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் இந்த நேரத்தில் தேர்வுகளை நடத்துவது கடினம்.
TN Job “FB Group” Join Now
எனவே இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்த நேரத்தில் இத்தனை பேருக்கு நேர்முக தேர்வுகள் நடத்துவதால் பாதிப்பு ஏற்படும் எனவே காவலர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்க வேண்டும் இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு? அரசு ஆலோசனை!
ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக முதற்கட்டமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மேலும் திருவிழாக்கள், மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் அவ்வாறு அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.