TNUSRB 2ம் நிலை காவலர் பணியிடங்கள் – ஜூலை 26 உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு!!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்ற 11,813 காவலர் பணியிடங்களுக்கு ஜூலை 26 முதல் 40 மையங்களில் உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்தகுதி தேர்வு:
தமிழகத்தில் காலியாக உள்ள காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். 11,813 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் இதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வு மூலமாக ஆயுதப்படை 2ஆம் நிலை காவலர் பதவிக்கு 3,784 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில் ஆண்கள் 685 பேரும், பெண்கள் 3,099 பேரும் தேர்வு செய்ய உள்ளனர்.
TN 12th Result Marksheet Download – பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம்!
மேலும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 2ஆம் நிலை காவலர் பணிக்கு 6,545 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஆண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். அதே போல சிறைத் துறையில் 2ஆம் நிலை காவலர் பணிக்கு ஆண்கள் 107பேர், பெண்கள் 12 பேர் என மொத்தம் 119 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தீயணைப்பு துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 ஆண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆயுதப்படை மற்றும் சிறைத்துறையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கு 5,50,314 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4,91,000 பேர் எழுத்து தேர்வில் கலந்து கொண்டனர். இதற்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 1:5 என்ற விகிதத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, மற்றும் உடல் திறன் போட்டி ஆகியவை கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் பல தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது, இதனால் இரண்டாம் நிலை காவலர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிறஜூலை 26ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகம் முழுவதும் 20 மையங்களில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, 100% ஆசிரியர்கள் வருகை – விரைவில் அறிவிப்பு!
விண்ணப்பதாரர்கள் தங்களது அழைப்பு கடிதத்தை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவலர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியான போது 10,906 காவலர் பணியிடங்கள் மட்டுமே அறிவிப்பட்டது. பின்னர் 11,813ஆக அதிகரிக்கப்பட்டது, ஆனால் தற்போது மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 19,541 பேர் தேர்வு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து அரசிடம் அனுமதி பெற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.