TRB மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை கிடையாது !!

0
TRB மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை கிடையாது !!
TRB மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை கிடையாது !!

TRB மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை கிடையாது !!

TRB மூலம் கடந்த 2008ம் ஆண்டு தேர்வான கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அது குறித்த தகவல்களை கீழ் வழங்கியுள்ளோம்.

இந்த உத்தரவு தொடர்பாக தொடக்க கல்வி இயக்குநரிடம் இருந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஆசிரியர் தேர்வாணையம் மூலமாக கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது என்றும், அவ்வாறு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய தேவை இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேர்வாணையம் மூலமாக தற்காலிகமாக பணிநியமனம் வழங்கப்பட்டவர்களுக்கும், நீதிமன்ற வழக்கில் மற்றும் வேறு சில நிர்வாக காரணங்களுக்காக வழங்கப்படும் பணி நியமனங்களுக்கு தனியாக வரன்முறை செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டப்பட்டு இருந்தது. ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளை முறையாக பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!