TN TET தேர்வு – 75 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி? முதல்வருக்கு கோரிக்கை!
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் தேர்ச்சி மதிப்பெண் சதவீதத்தை 50 ஆக குறைக்க வேண்டும் என்று தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
TET தேர்வு:
தமிழகத்தில் அரசு மற்றும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) தகுதித்தேர்வு (TET) நடத்தப்பட்டு வருகிறது. இந்த டெட் தேர்வு 2 தாள்களாக நடத்தப்படும். முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கானது, 2ம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்குரியது. அந்த வகையில் கடந்த 2022 அக்டோபர் மாதம் TET முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நடப்பு மாதம் TET தாள் – 2 தேர்வு மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதலில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித்தேர்வு மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதில் 55% அதாவது 83 மதிப்பெண்கள் பெற வேண்டியது கட்டாயம்.
தற்போது ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு, நியமன தேர்வு என 2 கட்ட தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் வினாக்களும் HOT என்ற உயர் சிந்தனை வினா வகையில் உள்ளது. அதனால் TET தேர்வின் தேர்ச்சி சதவீதத்தை 50 ஆக குறைக்க வேண்டும். மேலும் 75 (50%) மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்று அரசு அறிவிக்க வேண்டும் என்று தேர்வர்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.