தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
வட்டார மேலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) இருந்து கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த அரசு பணிக்கு என 14 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வட்டார மேலாளர்கள் பதவிக்கு 4 பணியிடங்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு 10 பணியிடங்கள் என மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான Ms Office சான்றிதழுடன் ஆன பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். Computer Science மற்றும் Computer Applications பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும். இப்பணிக்கு பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டிருக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
ICMR – RBMCH-ல் ரூ.32,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.