TNSRLM தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – ஒரு நாளுக்கு ரூ.3,500/- ஊதியம்!
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் மாவட்ட வள வல்லுநர் (District Resource Person) பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 10.01.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனம் | தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) |
பணியின் பெயர் | District Resource Person |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் மாவட்ட வள வல்லுநர் (District Resource Person) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மாவட்ட வள வல்லுநர் கல்வி தகுதி:
District Resource Person பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Post Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மாவட்ட வள வல்லுநர் அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
மாவட்ட வள வல்லுநர் வயது வரம்பு:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
ISRO விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – Degree முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!
மாவட்ட வள வல்லுநர் ஊதியம்:
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.2,000/- முதல் ரூ.3,500/- வரை ஒரு நாளுக்கான ஊதியமாக வழங்கப்படும்.
TNSRLM தேர்வு முறை:
District Resource Person பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNSRLM விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (10.01.2023) தபால் செய்ய வேண்டும்.