TNSRLM வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் கீழ் இயங்கி வரும் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வட்டார இயக்க மேலாளர் பணிக்கு என 02 பணியிடங்களும், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு என 33 பணியிடங்களும் காலியாக உள்ளது.
- இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தது 03 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய தேதியின் படி, குறைந்த பட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 28 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.