தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 348 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

1
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - 348 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - 348 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 348 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பருவ கால பட்டியல் எழுத்தர் மற்றும் உதவுபவர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என 348 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNCSC தஞ்சாவூர் வேலைவாய்ப்பு விவரங்கள்:

பருவ கால பட்டியல் எழுத்தர் – 159 பணியிடங்கள் மற்றும் பருவ கால உதவுபவர் – 189 பணியிடங்கள் என மொத்தம் 348 பணியிடங்கள் காலியாக உள்ளன. 01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

பருவ கால பட்டியல் எழுத்தர் பதவிக்கு இளங்கலை அறிவியியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் முடித்திருக்க வேண்டும். மேலும் இப்பதவிக்கு ரூ.5285 + ரூ.3499 (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ.120/- வழங்கப்பட உள்ளது. பருவ கால உதவுபவர் பதவிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.5218 + ரூ.3499 (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ.100/- வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!