TNRTP நிறுவனத்தில் ஒரு நாளைக்கு ரூ.2,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக மாற்றத் திட்டம் (TNRTP) கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. District Resource Person பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. நாளை (10.06.022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.
TNRTP வேலைவாய்ப்பு விவரங்கள்:
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக மாற்றத் திட்டத்தில் (TNRTP) District Resource Person பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
- District Resource Person பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Agriculture, Horticulture, Animal Husbandry, Fisheries பாடப்பிரிவில் Degree அல்லது Master’s Degree படித்தவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- District Resource Person பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ஒரு நாளுக்கு ரூ.2,000/- ஊதியமாகவும், உள்ளூர் போக்குவரத்து செலவாக ரூ.250/- பெறுவார்கள்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TNRTP விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். நாளை (10.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.