திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400/-
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள காலிப்பணியிடங்களான பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான ஊதியமாக ரூ.35,400/- – 1,12,400 வரை வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் |
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு |
பணிகள் |
பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் |
மொத்த பணியிடங்கள் |
04 |
விண்ணப்பிக்கும் முறை |
நேரடி நியமனம் |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
22.01.2021 |
ஊரக வளர்ச்சி துறையில் உள்ள காலிப்பணியிடங்கள்:
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கு 4 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்பார்வையாளர் வயது வரம்பு :
பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் 01.07.2020 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கண்காணிப்பாளர் பணிக்கான கல்வி தகுதி:
ஊரக வளர்ச்சி துறையின் பணிக்கான கல்வித்தகுதியாக Diploma in Civil Engineering பயின்று இருக்க வேண்டும்.
இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கான சம்பளம்:
இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கான சம்பளம் மாதம் ரூ.35,400 – ரூ.1,12,400 வரை அரசு நிர்ணயித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் தேர்வு செயல் முறை:
தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படுவர். அதன்பிறகான எழுத்து தேர்விற்கான தேதி, இடம் குறித்து நுழைவுசீட்டு அனுப்பி வைக்கப்படும்.
TNRD திருநெல்வேலி விண்ணப்பிக்கும் முறை:
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவம் மாவட்ட ஆட்ச்சித்தலைவர் அலுவலகத்திலும் , www.ncs.gov.in , https://thirunelveli.nic.in என்ற இணைய தளத்திலும் பெறலாம். தக்க சான்றிதழ்களுடன் கூடிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி பிரிவு) நேரில் சென்று 22.01.2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் வழங்கலாம் அல்லது கீழே உள்ள முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பலாம்.
முகவரி:
ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி பிரிவு),
மாவட்ட ஆட்சியரகம்,
திருநெல்வேலி.