சேலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 !
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் கொளத்தூர், வீரபாண்டி, தலைவாசல், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, ஆத்தூர், எடப்பாடி, நங்கவள்ளி, மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர் அறிவிக்கை வெளியாகி உள்ளது. தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 17/06/2020 க்குள் அனுப்ப வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | சேலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை |
பணிகள் | ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர், பதிவுரு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் |
மொத்த பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.06.2020 |
காலிப்பணியிடங்கள்:
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் கொளத்தூர், வீரபாண்டி, தலைவாசல், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, ஆத்தூர், எடப்பாடி, நங்கவள்ளி, மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் ஈப்பு ஓட்டுநர், பதிவுரு எழுத்தர், இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
01.07.2019 தேதியின் படி, விண்ணப்பத்தார்களின் வயது குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
8 ஆம் வகுப்பு/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
ஈப்பு ஓட்டுநர், பதிவுரு எழுத்தர், இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் – ரூ.15700 – 50000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 17.06.2020 க்குள் அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.