தமிழக ஊரக வளர்ச்சி துறையில் 777 ஓவர்சீயர் பணியிடங்கள் – தேர்வு திடீர் ரத்து!!
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள 777 ஓவர்சீயர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நாளை பல்வேறு இடங்களில் நடைபெற இருந்த நிலையில் அது ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஓவர்சீயர் தேர்வு:
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஊரக வளர்ச்சி துறையில் கட்டடங்கள் கட்டுதல், சாலை அமைத்தல் மற்றும் பாலம் கட்டுதல் போன்ற பணிகளை மேற்பார்வையிடும் பணிக்காக (ஓவர்சீயர்) 777 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
கோவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பிப்ரவரி 17 நடைபெறுகிறது!!
இப்பணிக்கு விண்ணப்பிக்க சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருந்தால் போதுமானது. 777 காலிப்பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்த நிலையில் நாளை எழுத்துத்தேர்வு நடைபெற இருந்தது. சேலம், அரியலூர், விழுப்புரம், நீலகிரி, கரூர், தேனி, திருப்பத்தூர், தஞ்சை, தென்காசி, விழுப்புரம் என 9 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இத்தேர்வுகள் நாளை தொடங்கி பிப்ரவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஓவர்சீயர் பணியிடத்திற்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாளை நடைபெற இருந்த தேர்வு உரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் இதற்கு விண்ணப்பித்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்