தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
பதிவு எழுத்தர், இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் இருந்து கடந்த மாதம் வெளியானது. இந்த அரசு பணிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் கால தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பதிவு எழுத்தர் – 1, இரவு காவலர் – 1 மற்றும் அலுவலக உதவியாளர் – 3 பணியிடங்கள் என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பத்தாம் வகுப்பு அல்லது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 01.07.2022 தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
- மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,400/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 29.07.2022 உடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
MBC