கைநிறைய சம்பளத்துடன் மதுரையில் தமிழக அரசு வேலை !
பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 08.01.2021 இறுதி நாள், என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி |
பணியின் பெயர் | பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் |
பணியிடங்கள் | 11 |
கடைசி தேதி | 08.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNRD காலிப்பணியிடங்கள்:
பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.
மதுரை மாவட்ட வயது வரம்பு:
2020 ஜூலை மாதம் 1ம் தேதி அன்று 35 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
மாத ஊதியம்:
ரூ.35,400 – ரூ.1,12,400 என்ற ஊதிய அட்டவணையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
TNRD கல்வி தகுதி:
DIPLOMA IN CIVIL ENGINEERING கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கான கல்வியினை முழு நேர அல்லது பகுதி நேர படிப்பு முறையில் மட்டுமே பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், மதுரை – 625 020 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 08/01/2021 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
நான் எட்டு படித்து இருக்கேன்வேலைகிடைக்குமா
Naan cattaring padithu iruken. Enakku vellai irukkum ah.