தமிழக ஊரக வளர்ச்சிதுறையில் வேலை – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் & இரவு காவலர் பதவிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வு செயல்முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து 18.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் & இரவு காவலர் |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்:
- அலுவலக உதவியாளர் – 3
- இரவு காவலர் – 1
- என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
மேற்கண்ட 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.07.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
கல்வி தகுதி:
- அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
- இரவு காவலர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
மாதம் ஒன்றுக்கு அலுவலக உதவியாளர் மற்றும் வாட்ச்மேன் பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ. 15,700 – 50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் // நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 18.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.