ஒரே தேசம் ! ஒரே தேர்வு ! TNPSC ஆணையத்திற்கு ஆபத்தா ????
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் ஒரே தேசம் ஒரே தேர்வு என்ற திட்டமும் ஒன்று. தொலைநோக்கு சிந்தனையுடன் இது போன்ற திட்டங்கள் துவங்கப்பட்டாலும் ஆதரவு போன்றே எதிர்ப்பும் ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில் மத்திய அரசு பணியாளர்களை தெரிவு செய்ய நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வுகளை நடத்த தேசிய பணியாளர் தேர்வு முகமை ஏற்படுத்தப்பட்டது. இவை இந்தியாவின் 12 மாநில மொழிகளிலும் தகுதி தேர்வினை நடத்த உள்ளது.
இதனால் தமிழ் மொழியிலும் தேர்வு நடைபெறும் எனவே அனைவராலும் மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும். இதனை பல கல்வியாளர்கள் வரவேற்கின்றனர். மேலும் இதனால் மாநில அரசின் தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால் இந்த தேர்வு முகமை முதல்நிலை தேர்வினை மட்டுமே நடத்தும் என்றும் மீத தேர்வுகளை மாநில தேர்வாணையமே நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிஎன்பிஎஸ்சி போன்ற மாநில தேர்வாணையங்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்றே கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்