சித்தாந்தங்கள்
- வட இந்தியாவில் பக்தி இயக்கம் தீவிரமாகக் காரணம் – இஸ்லாமியர் படையெடுப்பு
- பக்தி என்பதன் பொருள் – வழிபாடு
- பஞ்சாபில் சீக்கிய சமயம் தோன்றக்காரணம் – பக்தி இயக்கம்
- தமிழகத்தில் வைதீக ஒழுக்க நெறி,சமயம், கலை இலக்கியம் பண்பாடு ஆகியவற்றில் மறுமலர்ச்சி ஏற்பட்ட காலம் – கி.பி. 7 -ம் நூற்றாண்டு பிற்பகுதி.
- 8 – ம் நூற்றாண்டில் தோன்றிய ஆழ்வார்கள் -ஆண்டாள், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்
அத்வைதம்:
- தோற்றுவித்தவர் – சங்கரர்
- கி.பி. 788ல் கேரளாவில் காலடியில் (வடதிருவாங்கூர்) பிறந்தவர்.
- புத்த, சமணக்கொள்கைகளை எதிர்த்தார்.
- இதற்கு வேதாந்த மதம் என்று பெயர்
- இதனை பின்பற்றுவோர் – வேதாந்திகள்.
- வேதவியாசர் இயற்றிய பிரம்மசூத்தித்திற்கும், பகவத்கீதைக்கும், தசோபநிஷத்துகளுக்கும் அத்வைத சித்தாந்தப்படி பாஷ்யம் செய்துள்ளார்.
- இம்மூன்றையும் ‘ பிரஸ்தானதிரயம்’ எனக் கூறுவர்.
- சைவ, வைணவ பேதமற்றவர். விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் இயற்றியுள்ளார்.
- தமது 32-வது வயதில் முக்தி பெற்றார். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டை, கூடல் முதலியவற்றால் நிலைபெற்ற பேரின்பத்தை அடைந்து பிரம்ம மயமாவதே முக்தி.
- அ + த்வைதம். அ – இல்லை. த்வைதம் – இரண்டு. அத்வைதம் – இரண்டற்ற ஒன்று.
- அகம்பிர்மாஸ்மி – நான் பிரம்மமாயிருக்கின்றேன்.
- அத்வைதம் (அ) அத்விதீயம் – இதன் வேறுபெயர் – கேவலாத்து விதம்.
- முக்கிய உபநிஷத்துகளின் முடிவு பிரம்மம் ஒன்றே, உள்பொருள் உலகம் பிரம்மத்தின் தோற்றமே” என்பது இவரின் கொள்கையாகும்.
விசிஷ்டாத்வைதம்:
- தோற்றுவித்தவர் – இராமானுஜர். ஸ்ரீபெரும்புதூரில் 1017-ல் பிறப்பு.
- 18-வயதில் ஸ்ரீரங்கம் சென்று பெரியநம்பியை சந்தித்து கொள்கை கற்று துறவு பூண்டார்.
- பிரமசூத்திரம், பகவத்கீதைக்கு பாஷ்யம் இயற்றியுள்ளார்.
- சங்கரர் கொள்கையினை மறுத்தார்.
- சித்து, அசித்து, பரமபிரமம் ஆகியவை ஒன்றாகவே உள்ளன.
- பக்தி இயக்கத்தின் முன்னோடி.வைணவ முனி என அழைக்கப்பட்டார்
- திருக்கோட்டியூர் என்ற இடத்தில் நமொ நாராயணா என்ற மந்திரத்தை போதித்தார்.
- கடவுளை அன்புக்கடல், அழகின் இருப்பிடம் எனக் கருதினார்.
- இவரின் போதனைகள் கீதை, உபநிடதத்தை அடிப்படையாக கொண்டவை.
- ஆலய நுழைவு இயக்கத்துக்கு முன்னாடி என அழைக்கப்பட்டது.
- பேரின்பத்தை அடைய பக்தியே சிறந்த நெறி என்றார்.
- நீலகண்டசிவாச்சாரியார் – கோகர்ணத்தில் பிறந்த தெலுங்கர்.
- பிரமசூத்திரத்திலுள்ள பாஷ்யத்திற்கு சைவ விசிஷ்டாத்வைத முறைப்படி பாஷ்யம்.
- எழுதியவர் – நீலகண்டசிவாச்சாரியார். இதற்கு ‘நீலகண்டபாஷ்யம்” எனப்பெயர்.
துவைதம்(பேதாவாதம்):
- தோற்றுவித்தவர் – மத்துவர் எனும் ஆனந்ததீர்த்தர்.
- இயற்பெயர் – வாசுதேவன்.
- இவர் துளுவநாட்டில் உடுப்பிக்கருகில் அநந்தேசுவர கிராமத்தில் பிறந்தார்.
- காலம் 1238 – 1318. 9 வயதில் அச்சுதபிரகாசரின் சீடராகி துறவியானார்.
- பிரமசூத்திரம், கீதை, தசோபநிஷத் போன்றவற்றிற்கு துவைத முறைப்படி
பாஷ்யம் இயற்றியுள்ளார். - 37 பெரிய கிரந்தங்களை இயற்றியுள்ளார்.
- துவி என்றால் இரண்டு எனப்பொருள். ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறுவேறு.
- பிரம்மா முதலிய தேவர்கள் ஜீவர்களே. பிறப்பு, இறப்பு உண்டு. ஸ்தூலதேகம் உண்டு.
- கர்மம் தீர்ந்தால் மோட்சம் உண்டாகும்.
- திருமாலே உயர்ந்த தெய்வம், அவருக்கு செய்யும் பக்தியே முக்திக்கு சாதனம் என்றார்.
- மத்துவர் கொள்கைகளின் சுருக்கம் – உயிர்களின் அடிப்படைக் குணங்களாகிய சத்துவம், ராசசம், தாமசம் என்ற வகையிலே அவை பெறும் முக்திநிலைகள்.
1) இன்பமே உள்ள முக்தி 2)இன்பம் மற்றும் துன்பம் கலந்த முக்தி 3)துன்பமே உள்ள
முக்தி - துறவு, பக்தி, தியானத்தின் மூலம் வீடு பேறு அடையலாம் என்பது இவர் கோட்பாடு
இராமானந்தர்:
- இராமனுஜரின் சீடர்.
- இந்தியில் இராமனுஜரின் போதனைகளை வட இந்தியபகுதிகளில் பரப்பியவர்.
- இந்தியில் கருத்துக்களை போதித்த முதல் சீர்திருத்தவாதி.
- கடவுள் பார்வையில் அனைவரும் சமம். உயர்வு, தாழ்வு என்ற பேதம் கிடையாது
- இராமானந்தரின் கூற்று.
- சீடர்கள் – 12 பேர் (முக்கியமானோர் -கபீர்தாசர், பத்மாவதி
வல்லபாச்சாரியார்:
- பிறப்பு – கி.பி.1479 – ல் வாரணாசி
- இறுதியாக தங்கிய இடம் – பனாரஸ் (வாரணாசி)
- இவர் போதித்த தத்துவம் – சுத்த அத்வைதக் கோட்பாடு ( தூய ஒரு பொருள் கோட்பாடு)
- இவர் போதித்த கோட்பாடு – புஷ்டி மார்க்கம்
- இவரின் சீடர்களில் அஷ்டசாப் என்ற எட்டு கவிஞர்கள் இருந்தன
- கிருஷ்ணனே பிரம்மம் பக்தியுடன் முக்தியடைந்து பரமாத்மாவுடன் ஆத்மா கலந்து கொள்ளலாம் என்பது இவரின் கொள்கையாகும்
நாமதேவர்:
- பிறப்பு மஹாராட்டிராவில் உள்ள பண்டரிபுரம்
- இவரின் கொள்கை உண்மை உண்மை பக்தி, கடவுள் வழிபாடு
- சலவைத் தொழிலாளியின் மகன்.
- விஷ்ணுவை “வித்தோபா” என அழைத்தவர்.
- உருவ வழிபாடு புரோகித சடங்குகளை எதிர்த்தார்
- உன்னையே உற்றுப்பார்த்து ஹரியின் பெயர் நாடு என்றார்
- இவரின் பாடல்கள் சீக்கியரின் குருகிரந்தசாஹிப் என்ற புனித நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
சைதன்யர்:
- பிறப்பு- வங்காளத்தில் உள்ள நாடியா என்ற இடம் கி.பி.1485
- வங்காளத்தைச் சேர்ந்த இவர் தீவிர கிருஷ்ண பக்தர்.
- 24 – ம் வயதில் துறவு பூண்டார்.
- இவரின் சீடர்கள் இவரை விஷ்ணுவின் அவதாரமாக கருதினர். மகாபிரபு என
அழைத்தனர். - கடவுளின் புகழை பொது இடங்களில் பாடும் சங்கீர்த்தனம் என்ற முறையை கொண்டு வந்தார்.
துளசிதாசர்:
- “கோசாமி” என்று அழைக்கப்பட்ட இவர் இராமபக்தர்.
- இராமாயணத்தை இந்தியில் மொழிபெயர்த்தார். இந்நூலின் பெயர் -இராமசரிதமனஸ்.
- ஹிந்தி மொழியில் ஜானகிமங்கள், பார்வதி மங்கள் என்ற நூல்களை எழுதினார்.
- இவர் எழுதிய மற்றொரு நூல் – அனுமன் சாலீஸா (40 பாடல்கள்)
மீராபாய்:
- இராஜபுத்திர இளவரசி
- தீவிர கிருஷ்ணபக்தரான இவர் இராஜஸ்தானி மொழியில் பக்தி பாடல்கள் பாடினார்.
- வாழ்நாளின் பெரும்பகுதியை கிருஷ்ணன் பிறந்த இடமான மதுராவிலும்,
வளர்ந்த இடமான பிருந்தாவனத்திலும் கழித்தார். - மேவார் தலைநகர் சித்தூரில் இவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.
- பிறப்பு – இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு பேரின்ப நிலையை அடைய கிருஷ்ண பக்தி அவசியம் என்பது இவர் கருத்து
- எளிய பக்தியும் நம்பிக்கையுமே வீடு பேறு அடைய வழி என்றார்
குரு இராமதாசர்:
- சத்ரபதி சிவாஜியின் குரு.
- கடவுள் முன் அனைவரும் சமம் என்பது இவர் கருத்து.
- சமயக் கொள்கை உபதேசித்ததுடன், சிவாஜி மூலம் ஒரு தேசம் உருவாக
காரணமாகயிருந்தவர்
துர்க்காராம்:
- மகாராஷ்டிர துறவி.
- கிருஷ்ணனை பாண்டுரங்கன் என அழைத்தார்.
- இவரின் பக்தி பாடல்கள் – அபங்கங்கள அபங்கங்கள அபங்கங்கள் எனப்படும்.
ஞானேஸ்வரர்:
- மகராஷ்டிராவில் பிறந்த இவர் விஷ்ணுவை கிருஷ்ணன் வடிவிலும், லித்தோபா
வடிவிலும் வணங்கியவர். - பகவத் கீதையை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்தார். இதன் பெயர் ஞானேஸ்வரி.
நிம்பர்கர்:
- கோதாவரி நதிக்கரையில் பிறந்து மதுராவிற்கருகே பிரிஜா என்ற இடத்தில் வாழ்ந்தார்
- ராதா – கிருஷ்ண வழிபாடு செய்தார் இவரின் கொள்கை பேதா பேதம்
- தத்துவம் – துவைதாத்வைதம்: இராமனுஜரின் சமகாலத்தவர்.
- சத்-வைணவம் என அழைக்கப்படுவது – நிம்பர்கரின் வைணவம்.
ஏகநாதர்:
- பிறப்பு – மஹாராட்டிராவில் பைத்தா என்ற ஊரு
- கண்ணனின் தீவிர பக்தர் பெரிய பாகவத புருஷர்
சூர்தாசர்:
- இவர் எழுதிய சூர்சகார் என்ற நூல் கண்ணனை குழந்தையாக கருதுகிறது
- “வாழ்வு ஒரு விளையாட்டு” , வீர தீர செயல், ஆனால் போராட்டம் அன்று என கூறினார்.
பசவர்:
- கன்னடத்தில் வசித்த “லிங்காயத்” என்ற வீர சைவ வகுப்பை சேர்ந்தவர்.
- சிவனே உயர்ந்த கடவுள் என்றார்.
- இவரை பின்பற்றுவோர் லிங்காயத்துக்கள் எனப்படுகின்றார்
Pdf Download
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்