ஆழ்வார்கள்
ஆழ்வார்கள் | அம்சம் | பாசுரங்கள் | இயற்றிய நூல்கள் |
பொய்கையாழ்வார் | பஞ்சசன்யம் | 100 | முதல் திருவந்தாதி |
பூதத்தாழ்வார் | கதை | 100 | 2-ம் திருவந்தாதி |
பேயாழ்வார் | நந்தகம் (வாள்) | 100 | 3-ம் திருவந்தாதி |
திருமழிசையாழ்வார் | சக்கரம் | 216 | திருச்சந்தவிருத்தம் 120 நான்முகன்திருவந்தாதி 96 |
மதுரகவியாழ்வார் | வைநதேயர் | 216 | கண்ணின் நுண் சிறுத்தாம்பு |
நம்மாழ்வார் | நாம்சம் | 1296 | திருவாய்மொழி |
குலசேகரர் | கௌஸ்துபம் | 105 | பெருமாள்திருவாய்மொழி |
பெரியாழ்வார் | கருடன் | 473 | திருப்பல்லாண்டு, பெரியாழ்வார்திருமொழி. |
ஆண்டாள் | பூமி | 173 | திருப்பாவை 30, திருமொழி 140 |
தொண்டரடி பொடியாழ்வார் | வைஜயந்தி (எ) வனமாலை | 55 | திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருமறை திருமலை திருப்புகழ்ச்சி |
திருப்பாணர் | வத்சம் | 10 | அமலான் ஆதிபிரான் |
திருமங்கை | சாரங்கம் (வில்) | 1361 | ஆறு அங்கங்கள் |
- திவ்விய பிரபயதத்தை அருளியதால் – திராவிடாச்சாரியர்கள் எனப்படுவர்.
- இருயதமிழ் புலவர்கள் , ஆதிபக்தர்கள் என்ற பெயராலும் அழைக்கப்படுவர்.
- முற்காலத்து ஆழ்வார்கள் – பொய்கையாழ்வார் , பேய் ஆழ்வார் , திருமழிசை ஆழ்வார்.
- இடைக்காலத்து ஆழ்வார்கள் – நம்மாழ்வார் , மதுரகவியாழ்வார் , குலசேகர ஆழ்வார், பட்டர்பிரான் என்ற பெரியாழ்வார் , கோதை நாச்சியார் என்ற ஆண்டாள்
- பிற்காலத்து ஆழ்வார்கள் – தொண்டரடிப் பொடியாழ்வார் , திருப்பாணாழ்வார், கலியன் என்ற திருமங்கை ஆழ்வார்.
- முதலாழ்வார்கள் எனப்படுவோர் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.
பொய்கையாழ்வார்
- பிறப்பிடம் – கச்சி (காஞ்சி) நகரிலுள்ள திருவெ:.கா
- அவதரித்த மலர் – தாமரை
- நட்சத்திரம் – ஐப்பசி திருவோணம்.
- அம்சம் – பஞ்சசன்யம் (சங்கு)
- இஷ்டதெய்வம் – திருப்பதி ஏழுமலையான்
- அருளிய திருநாமம் – ‘வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே”
- அருளியது – முதல் திருவயதாதி
- “நயவேன் பிறர்பொருளை, நன்னேன் கீழாரோடு” எனத் தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார்.
பூதத்தாழ்வார்
- பிறப்பு – தொண்டைநாட்டிலுள்ள திருக்கடல்மல்லை(மாமல்லபுரம்)
- அவதரித்த மலர் – குருக்கத்தி மலர்
- நட்சத்திரம் – ஐப்பசி அவிட்டம்.
- அம்சம் – கௌமோதகி எனும் கதாயுதம்.
- இஷ்டதெய்வம் – ஸ்ரீரங்கம் திருவரங்கர்.
- அருளிய திருநாமம் – ‘பொன்புரையும் திருவரங்கப் புகழுரைத்தான் வாழியே”
- அருளியது – 2 -ம் திருவயதாதி
- “ அன்பே தகழியா , ஆர்வமே நெய்யாக” எனத் தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார்.
பேயாழ்வார்
- பிறப்பு – மயிலாப்பூர்
- அவதரித்த மலர் – செவ்வல்லிப்பூ
- நட்சத்திரம் – ஐப்பசி சதயம்.
- அம்சம் – நந்தகம் (வாள்)
- இவரின் வேறுபெயர் – மஹதாஹ்வயர் (திருமழிசையாழ்வாரை திருத்தியதால்)
- இஷ்டதெய்வம் – திருக்கோவிலூர் இடைகழியில் உள்ள திருமால்
- அருளிய திருநாமம் – ‘நேமிசங்கண் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே”
- ‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” – பேயாழ்வார்.
- அருளியது – 3 -ம் திருவயதாதி
- “அது நன்று இது தீது என்று ஐயப்படாதே“ எனத் தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார்.
- முதல் மூன்று ஆழ்வார்கள் சந்தித்த இடம் – திருக்கோவிலூர் இடைகழி.
திருமழிசையாழ்வார்(புகழ்மழிசை ஐயன்)
- பிறப்பு -திருமழிசை
- அம்சம் – தயீருவாடியீ (சக்கர அம்சம் )
- சிவவாக்கியர் என்ற பெயருடன் சைவ சமயத்தில் இருயதார். பேயாழ்வார் மூலம் வைணவத்திற்கு மாறினார்.
- அருளியது – நான்முகன் திருவயதாதி , திருச்சயத விருத்தம்
- எல்லாம் திருமால் என எண்ணுகிறார்
- “தன்னுள்ளே திரைத்தெழும் தரங்கவென் தடம்போல்“ எனத் தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார்.
நம்மாழ்வார்(அருள்மாறன்)
- பிறப்பு -18 திருப்பதிகளையுடைய பாண்டிநாட்டில் தாமிரபரணி கரையில் ஆழ்வார்திருநகரியில் (திருக்குருகூர்)
- நட்சத்திரம் – வைகாசி விசாகம்
- அம்சம் – திருக்குறுங்குடி நம்பியின் அம்சமும், ஸ்ரீகௌஸ்துபம் எனும் இரத்தினாம்சமும், ஸேனை முதலியோரது அம்சம்
- சிறப்புப் பெயர்கள் – மாறன் , சடகோபன் , பராங்குசன் , வகுளபூஷணன்
- இவர் பாடிய பாசுரங்களை நான்காவது ஆயிரம் என்பர்
- இவர் பாடிய மொத்த பாசுரங்கள் – 1296
- உலகப் பற்றினை விட்டு இறைவனை சரண் அடையதால் அனைத்தும் பெறுவது எளியது என்றார்
- “வீடுமின் முற்றவும் , வீடு செய்து உம்முயிர் என்ற பாடலைப் பாடியுள்ளார்
- சடம் எனும் வாயுவை ஓட்டி ஒழித்ததினால் ‘சடகோபன்” என பெயர் பெற்றார்.
- இவர் 16 வயது வரை மௌனமாய் இருந்தார். ஸேனை முதலியார் இவருக்கு திருவிலச்சினை செய்து, உபதேசம் செய்து வைஷ்ணவராக்கினார்.
- இவர் எழுதிய நூல்கள் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. இந்நான்கும் ‘நான்கு வேதங்கள்” எனப்படுகின்றன.
- ‘பொய்யில்பாடல்” என அழைக்கப்படுவது – திருவாய்மொழி.
- ‘மாறி மாறி பல பிறப்பும் பிறந்து” – திருவாய்மொழி
- இவர் அவதரிக்கும்போதே இறைவனிடம் பேரன்பு கொண்டதால் இவர் இறைவன் மீது கொண்டுள்ள பக்தியை ‘ஸஹஜபக்தி” எனக் கூறுவர்.
- இஷ்டதெய்வம் – கிருஷ்ணன்.
- இவர் ‘கிருஷ்ணத்ருஷ்ணாதத்வம்” என்று கொண்டாடப்பட்டவர்.
- ‘ஆழ்வார்களுக்கெல்லாம் தலைவர்” எனப் போற்றப்படுபவர் – நம்மாழ்வார்.
குலசேகராழ்வார்(சேரலர்கோன்)
- தந்தையார் – சேரநாட்டில் கோழிக்கோடு(திருவஞ்சிக்களம்) எனும் இராஜதானியில் அரசுபுரிந்த திரடவிருதன்.
- பிறப்பு – மாசி புனர்பூச நட்சத்திரம்
- அம்சம் – ஸ்ரீகௌஸ்துப மணி
- இயற்பெயர் – கௌஸ்துபாமசரர், சேரலர்கோன்.
- சிறப்பு பெயர்கள் – கொல்லிகாவலன், கூடல்நாயகன், கூடலர்கோன், கோழிக்கோன்குலசேகரன்.
- இவர் வடமொழியில் பாடியது – முகுந்தமாலை.
- இவர் இராமபிரானை வழிபட்டவர்.
- இவர் பாடிய பிரபந்தம் – பெருமாள்திருமொழி.
பெருமாள் திருமொழியில் கூறப்படும் பொருள்கள் :
முதல் மூன்று திருமொழிகள் | ஸ்ரீரங்கம் கோயிலைப் பற்றியது |
4-ம் திருமொழி | திருவேங்கடத்தைப் பற்றியது |
5-ம் திருமொழி | விற்றுவக்கோட்டையைப் பற்றியது |
6-ம் திருமொழி | ஆய்ச்சியர் ஊடலைப் பற்றியது |
7-ம் திருமொழி | தேவகியின் புலம்பலைப் பற்றியது |
8-ம் திருமொழி | நாமரின் தாலாட்டைப் பற்றியது |
9-ம் திருமொழி | தசரதன் புலம்பலைப் பற்றியது |
10-ம் திருமொழி | இராமாயணக் கதைச் சுருக்கம் |
பெரியாழ்வார் (துய்யபட்டநாதன் (அ) பட்டர்பிரான்)
- பிறப்பிடம் – ஸ்ரீவில்லிபுத்தூர்
- குலம் – வேயர்குலம்
- நட்சத்திரம் – ஆனி சுவாதி
- அம்சம் – கருடாம்சம்
- இயற்பெயர் – விஷ்ணுசித்தர்.
- வடபெருங்கோயிலுடையானுக்கு திருமாலை கட்டி சமர்பித்து வந்தார்.
- இவர் அருளியது – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி.
- நாராயணர் இவர் கனவில் கூறியபடி, மதுரை பாண்டியன் அவைக்களம் சார்ந்து திருமாலே பரம்பொருள் என நிறுவிக் கிழியை இறுத்தார்.
- நாலாயிர திவ்விய பிரபயதத்தில் முதல் பாடல் இவருடையது
- வரலாற்று குறிப்புகள் உள்ளடங்கிய பாடல்களை பாடியவர் – பெரியாழ்வார்
தொண்டரடிபொடியாழ்வார் (அன்பர்தாளிதூளி)
- பிறப்பு – சோழநாட்டில் கும்பகோணம் திருமண்டங்குடி
- நட்சத்திரம் – மார்கழி கேட்டை
- அம்சம் – திருமாலது வைஜயந்தி எனும் வனமாலை
- குலம் – பிராமணர்
- ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட்டார்.
- இயற்பெயர் – விப்ரநாராயணர்.
- இயற்றிய நூல்கள் – திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருமறைதிருமலை திருப்புகழ்ச்சி
- “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை வலியுறுத்தினார்.
திருப்பாணாழ்வார் (நற்பாணன்)
- பிறப்பு – சோழநாட்டு உறையூர்
- நட்சத்திரம் – கார்த்திகை மாத ரோகிணி
- அம்சம் – ஸ்ரீவத்ஸத்தின்(திருமறு) அம்சம்
- அந்தணனது நெற்பயிர்கதிரில் பிறந்ததால் முதலாழ்வார்களை போல ‘அயோனிஜர்”
எனப்பட்டார். - இவர் ஒரு கானஞானி. இவரை ஸோகஸாரங்கமாமுனிகள் தோளில் ஏற்றி ஸ்ரீரங்கம்
பெருமாள் முன்விட்டார். - இவர் ‘அமலான் ஆதிப்பிரான்” எனும் பாசுரம் பாடி இறைவனோடு ஐக்கியமானார்.
- இவர் பாடல் பெரும்பாலும் அரங்கநாதனைப் பற்றியதாகும்
- இறைவன் முன் ஏற்றத்தாழ்வு இல்லை என்பது இவரின் கோட்பாடு.
திருமங்கையாழ்வார்(நற்கலியன்)
- பிறந்த இடம் – சோழநாட்டு திருவாழிதிருநகரி எனும் திவ்விய தேசத்துக்கு
அருகேயுள்ள திருக்குறையலூர் - பிறபெயர்கள் – நீலன், பரகாலன், கலியன், மங்கைவேந்தன், ஆலிநாடான்,
நாலுகவிபெருமாள். - பிறப்பு – சேனைத்தலைவன் மகனாய் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம்
- அம்சம் -திருச்சாரங்கத்தின்(வில்) அம்சம்.
- மனைவி – குமுதவல்லி
- வயலாலி மணவாளனிடம் மந்திர உபதேசம் பெற்றவர்.
- பெரியபெருமாள்(ஸ்ரீரங்கம்) சந்நிதியில் திருப்பணி செய்தவர்.
- இவர் எழுதியவை – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்
திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய, பெரிய திருமடல், என்ற ஆறு பிரபந்தங்கள்(இவை
‘மாறன் பணித்த தமிழ் மறைக்கு அங்கங்கள்” என கூறப்படுகின்றன) - • திருவரங்க கோவிலின் சுற்றுசுவர் கட்டியவர் . சைவ நெறியிலும் ஈடுபாடு கொண்டவர்
- மன்னுமலை அரையன் பொற்பாவை என்ற சிவன் பாடலைப் பாடியுள்ளார்
ஆண்டாள்
- இயற்பெயர் – சுரும்பார் குழல் கோதை.
- சிறப்புப் பெயர்கள் – கோதை , சூடிக்கொடுத்த நாச்சியார். பிறப்பு – திருவில்லிப்புத்துர்
- பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்
- பாடியது – நாச்சியார் திருமொழி , திருப்பாவை
- “அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததி” எனக் கொண்டாடப்படுபவர் – ஆண்டாள்.
மதுரகவியாழ்வார்
- பிறப்பு – பாண்டிய நாடு திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரருகே திருக்கோளுர்
- நட்சத்திரம் – சித்திரை மாத சித்திரை
- அம்சம் – கணநாதரான குமுதரது அம்சம்
- சூரியோதத்திற்கு அருணோதயம் போன்று நம்மாழ்வார் அவதாரத்திற்கு முன் மதுரகவியாழ்வார் பிறந்தார்.
- பாடிய பிரபந்தம் – ‘கண்ணின் நுண் சிறுத்தாம்பு” (நம்மாழ்வார் பற்றி பாடியது)
நாதமுனிகள்
- நம்மாழ்வாரால் அருளப்பட்டவர்.
- விசிஷ்டாத்வைதம் அழியும்போது அதனை நன்கு பரப்பினார்.
- நாலாயிர திவ்விய பிரபந்தப் பாடல்களை தொகுத்தவர்.
- இவரின் பேரனான ஆளவந்தார் பரப்பிய சித்தாந்தத்தின் பெயர் – எம்பெருமானார் தர்சனம்.
எம்பெருமானார்
- இயற்பெயர் – திருவனந்தாழ்வான்.
- பிறப்பு – ஸ்ரீபெரும்புதூரில் சித்திரை மாத திருவாதிரையில் பிறந்தார்.
- பெற்றோர் – ஆஸரிகேசவபெருமாள் – பூமிபிராட்டி
- ‘பஞ்சாயுதங்களின் அவதாரம்” என திருவரங்கத்தமுதனாரால் அழைக்கப்பட்டவர்-
எம்பெருமானார் - பஞ்சாயுதங்களாவன : சுதர்சனம், நந்தகம், கதை, சாரங்கம், பாஞ்சசன்யம்.
- விஷ்வக்சேனருடைய அவதாரம், திரி தண்டம் செங்கோலின் அவதாரம் என வேதாந்ததேசிகனாரால் அழைக்கப்பட்டவர் – எம்பெருமானார்.
- தொண்டனூரில் ஜைனர்களுடன் வாதம் செய்தார் எனக் கூறும் நூல் – குருபரம்பராப்பிரபாவம்.
- பன்னிரு ஆழ்வார்களின் வைபவங்களை விரிவாக ‘குருபரம்பராப்பிரபாவம்” முதலிய நூல்களில் காணலாம்.
- பெருமாளை எப்போதும் நினைந்து வாழும் 12 ஆழ்வார்களும் ‘நித்தியஸரிகள்”
என்று திவ்வியஸரிய சரிதம், குருபரம்பராப்பிரபாவம் முதலிய நூல்கள் கூறுகின்றன. - புராணங்களைத் தழுவி நிற்கும் நூல்கள் – திவ்வியஸரிய சரிதம், குருபரம்பராப்பிரபாவம்
- எம்பெருமானாரை திருவனந்தாழ்வான் அவதாரம் என உரைக்கும் சான்றுகள் – குருபரம்பராப்பிரபாவம், திவ்வியசூரியசரிதம்.
- நாலாயிர திவ்வியபிரபந்த நூலின் அனைத்து பாசுரங்களுக்கும் உரை எழுதியவர் – பெரியவாச்சான்பிள்ளை.
- நம்மாழ்வார் பாசுரங்களுக்குமட்டும் உரை எழுதியவர் – வடக்குதிருவீதிபிள்ளை
- மணவாளமாமுனிகளாக அவதாரம் செய்தவர் – எம்பெருமானார்
- திருவனந்தாழ்வான், முதலில் எம்பெருமானாராய் அவதரித்து பின்பு மணவாளமாமுனிகளாய் அவதாரம் செய்தார் என ‘வரவரமுனிசதகம்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளவர் – எரும்பியப்பர்.
- நம்மாழ்வார் அருளியவை “நான்கு வேதங்கள்” என்றும், திருமங்கையாழ்வார் அருளியவை ‘ஆறு அங்கங்கள்” என்றும், பிற ஆழ்வார்கள் அருளியவை ‘உபாங்கங்கள்” (உதவிபுரியும் நூல்கள்) என்றும் அழைக்கப்படுகின்றன.
- தேசிகன் எழுதியது ‘ஸ்ரீமத்ரஹஸ்யத்ரஸாரம்”. இதன் வியாக்யானம்(விளக்கம்) ‘ஸாராஸ்வாதிநீ”
- இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்றவை வேதக் கருத்துக்களை தெளிவாக தெரிவிக்க வந்தமையால் அவை ‘ வேதோப ப்ரும்மஹணங்கள்” எனப்படும்.
- நாதமுனிகள் முதல் எம்பெருமானார் நடுவாய், மணவாளமாமுனிகள் ஈறாக உள்ள குருபரம்பரையை சேர்ந்த மஹான்கள் – பூர்வாச்சாரியார்கள் எனப்படுவர்.
வைணவத் தலங்கள்
- வடநாடு – நேபாளம் , துவாரகை
- மலைநாடு – திருவனயதபுரம்
- நடுநாடு – திருக்கோவிலுhர் , திருவேங்கடம்
- தொண்டைநாடு – காஞ்சிபுரம்
PDF Download
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்