இந்துக்களின் சடங்கு முறைகள்
இந்துக்கள் பிறப்பு, இறப்பு, வாழும் காலங்களில் செய்யும் சடங்குகள் – கிரியைகள் எனப்படும். இதனை தொல்காப்பியர் ‘கரணம்” என்பார். இவை சோடச சம்ஸ்காரங்கள் எனப்படும்.
- பும்ஸவனம் – பெண் கருவுற்ற 3 மாதத்தில் கர்ப்பதற்கு இடையூறு நேராவண்ணம் இறைவனை பிரார்த்தித்தல்.
- சீமந்தம் – கருகொண்ட 4 (அ) 8 மாதத்தில் குழந்தையை இரட்சிக்க தேவர்களை வேண்டுவது(வளைகாப்பிடுதல்).
- ஜாதகர்மம் – குழந்தை பிறந்தவுடன் செய்யவேண்டிய கிரியை, சாமர்த்தியம், ஆயுள்,
செல்வம் பெற வேண்டுதல். - நாமகரணம் – பெயர்சூட்டுதல்
- புண்ணியாவாசனம் – புண்ணியாவாசனம் செய்த புனித நீரை மாவிலையின் மூலம்
வீடு, மனிதர் மீது தெளித்தல். - நிஷ்க்ராமனம் குழந்தை பிறந்த 4 மாதங்கழித்து முதன்முதலில் வெளியே கொண்டு
செல்லுதல். - அன்னபிரசன்னம் – 6 வது மாதம் சோறு, தயிர், நெய், தேன் கலந்து கடவுளை பிரார்த்தித்து குழந்தைகளுக்கு கொடுத்தல்.
- வித்யாரம்பம் – குழந்தைகளுக்கு 5 வயதானதும் முதன்முதலி கல்வி பயில வைப்பது. கணபதி, குரு, சரஸ்வதியை வணங்கி ‘அரி அரி” என எழுதச்சொல்லுவது.
- கர்ணபூஷணம் – தோடு முதலிய தொங்க செய்யவும், தங்கம் வழியே பாயும் நீர் குழந்தைக்கு ஆரோக்கியம் தருவதாலும், தீய விஷயங்களை துளை வழியே வெளியே செலுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
- சௌனம் (குடுமி வைத்தல்) – குழந்தைக்கு முதன்முதலாக மொட்டையடித்தல்.
- உபநயனம – 7 வயதானதும் காயத்ரி மந்திரம் உபதேசித்து பூணூல் அணிதல். உபநயனம் செய்வோருக்கு தீட்சை செய்ய வேண்டும். பிறப்பு 2 என இந்துமதம் கூறுகிறது. அது பூணூல் அணிதல் முன் மற்றும் அணிந்த பின்.
- குருகுலவாசம் – மாணவர், குருவிற்கு பணிவிடை செய்து கல்வி கற்றல்.
- திருமணம் – குருகுலம் முடிந்தபின் குருவின் அனுமதி பெற்று நடைபெறுவது.
- குறிக்கோள் பகர்தல் (சங்கற்பம்) – காலம், இடம், செயலை விளக்கி பிரார்த்திக்க வேண்டும்.
- புனிதநீர் சுத்தி (புண்ணியாவாசனம்) – உடம்பு, உள்ளம் சுத்தி செய்யும்பொருட்டு புனித நீரை மணமக்களுக்கு தெளித்தல். புனித நீர் உருவாக்கும் முறை – அரிசியை கீழே இட்டு தர்ப்பை இட்டு மும்மூர்த்திகளை தியானித்து ஐந்தெழுத்துகளை எழுதி, பால், தயிர், நெய், கோமியம், கோசனம் என்ற 5 பொருட்களை சேர்த்து ‘பஞ்சகவ்யம்” ஆக்க வேண்டும்.
- காப்பு கட்டுதல் (ரக்க்ஷபந்தன்) – திருமணம் நடக்கையில் இடையூறு நேராவண்ணம் ஆண்களுக்கு வலது கையிலும், பெண்ணுக்கு இடக்கையிலும் விநாயகரை வணங்கி மஞ்சள் கட்டுதல்.
- முளையிடுதல் (அங்குரார்ப்பணம்) – உழவைச் சிறப்பிக்க சந்ததி விருத்தியின் பொருட்டு விவாக காலத்தில் செந்நெல், எள், வெண்கடுகு முதலிய தானியத்தை 12 மண்பாலிகைகளில் இட்டு வளர்த்தல்.
- குடவழிபாடு (கும்பபூஜை) – கும்பநீர் மூலம் கடவுளை வழிபட இது அவசியம்.
- எரியோம்பல் (அக்கினிகாரியம்) – தூய மணலில் உமி விரித்து ஆல், அரசு, மா, முதலிய குச்சிகளை வைத்து தீ மூட்டி நெல், நெய், பொரி, தானியமிட்டு தீயினை இறைவனாக வணங்குதல்.
- வடிவ வழிபாடு (மூர்த்தி பூஜை) – இறைவனை ஒரு வடிவத்தில் எழுந்தருளச் செய்து
வணங்குதல். - தானம் – திருமண நாளன்று ஏழை, எளியோருக்கு பொருள் கொடுத்தல்.
- கைபிடித்துகொடுத்தல் – மணமகளின் தந்தை, மணமகனுக்கு பெண்ணை கைபிடித்து கொடுத்தல்.
- திருமங்கலநாண் பூட்டுதல் – ஆச்சாரியர் கொடுக்க மணமகளுக்கு மணமகன் சகோதரியின் உதவியோடு தாலி கட்டுதல்.
- சஷ்டியப்த பூர்த் – 60 ஆண்டுகள் பூர்த்தியானதும் ‘ருத்ராட்ச” மாங்கல்யம் கட்டி சிற்றின்ப வாழ்வு முடித்து ஆன்மீக வாழ்க்கை வாழ பெற்றோரிடத்து நன்றி செலுத்தும் பொருட்டு பிள்ளைகள் செய்வது.
- சதாபிஷேகம் (80 – 84 வயது) – 80க்கு மேலுள்ளோர் 1000 பிறை கண்டோர் எனப்படுவர்.
- அபரக்கிரியை – ஒருவர் இறந்தபின் அவர் ஆத்மா சாந்தியடைய பிள்ளைகள் செய்யும் கிரியை.
- அந்தியேட்டி – இறந்தது முதல் தீயிலிடும் வரை செய்யும் கிரியைகள்.
- அத்தி சஞ்சயனம் – எலும்பு (அ) சாம்பலை சேகரித்து புனித நீரில் கரைத்தல்.
- சிரார்த்தம் – இறந்த நாளன்றி, அமாவாசை, வருடப்பிறப்பு நாட்களில் இறந்தோருக்கு தீர்த்தமுள்ள இடம் (அ) கோவிலில் செய்யும் கிரியை.
PDF Download
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்