கடவுளும் உயிரும்
- கடவுளால் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன, போகம் அளிக்கப்படுகிறது.
- உலகை தனு, கரண, புவன, போகம் என நான்கு வகைப்பட விளக்குவது – சைவநூல்
- தனு – 84 லட்சம் பேதத்திற்கும் கொடுக்கப்படும் உடம்புகள்.
- கரணம் – 36 தத்துவங்களை கொண்ட மனம் என்னும் அகக்கருவிகளாகவும், புறக்கருவிகளாக 60 தத்துவங்களையும் கொண்டது.
- உடம்புக்கு ஆதாரமாக உள்ள நிலம் – புவனம்
- போகம் – உயிர்கள், ஐந்து இந்திரியங்கள் மூலம் நுகர விரும்பும் இன்பமாகும்.
- அசுவத்தம் என்ற மரத்தின் இரு பறவைகள் – ஜீவாத்மா மற்றும் பரமாத்மா – முண்டக உபநிஷத்.
- ‘கேவல சகல சுத்தமென்று மூன்றவத்தை ஆன்மா” — சிவஞானசித்தியார்.
- உயிரின் மூன்று அடிப்படை உணர்வு நிலைகள் – 1)கேவலம் 2)சகலம் 3)சுத்தம்
- கேவலம்(இரவு) – அறியாமையில் அழுந்தும் நிலை
- சகலம் (பகல்) – உலகப்பொருட்களின் தன்மையில் அழுந்தும் நிலை.
- சுத்தம்(இரவு பகலற்ற இடம்) – முதல்வனின் திருவருளில் அழுந்தும் நிலை.
- கேவலாவத்தை : இறைவன் உலகைப் படைக்கும் முன் எவ்வித உடம்பும் இல்லாமல் ஆன்மா அஞ்ஞானத்தில் சூழப்பட்டு கிடக்கும்.
- சகலாவத்தை : தனு, கரண, போகத்தில் திளைக்கும் ஆன்மா.
- சுத்தாவத்தை : ஆன்மா விருப்பு, வெறுப்பற்ற நிலையிலிருக்கும். கன்மம், மாயை, அகன்று ஞானம் அருளும்.
- சித்தியாரின் கூற்றுப்படி, ஆன்மாவிற்கு வேறொரு வகையில் 5 அவத்தை உண்டு.
ஐந்து அவஸ்தைகள் | இடம் | கருவி |
---|---|---|
ஜாக்ரம் | புருவநடு | 35 |
சொப்பனம் | கழுத்து | 25 |
சுஷுப்தி | இதயம் | 3 |
துரியம் | நாபி | 2 |
துரியாதீதம் | மூலாதாரம் | 1 |
- உயிரானது அன்னமயகோசத்தைப் பற்றி தொழில்பட்டு வினைப்பயனை நுகரும் நிலை – நனவு(ஜாக்ரம்)
- உயிரானது பிராணமயகோசத்தைப் பற்றி நினைவு உணர்வுகளோடு கூடி வினைப்பயன்களை நுகரும் நிலை – கனவு (சொப்பனம்)
- உயிரானது மனோமயகோசத்தை பற்றி நின்று ஒடுக்கமுறும் நிலை – உறக்கம் (சுழுத்தி (அ) சுஷுப்தி)
- உயிரானது விஞ்ஞானமயகோசத்தைப் பற்றி நிற்கும் நிலை – பேருறக்கம் (துரியம்)
- உயிரானது ஆனந்தமயகோசத்தைப் பற்றி நிற்கும் நிலை – உயிர்ப்படக்கம்(துரியாதீதம்)
- சுஷுப்தியில் — பிராணவாயு, சித்தம், புருடத்துவம் ஆகியவை காணப்படுகிறது.
- துரியத்தில் — பிராணவாயு, புருடத்துவம் ஆகியவை காணப்படுகிறது.
- துரியாதீதத்தில் — புருடத்துவம் மட்டும் காணப்படுகிறது.
- நம் உடலினுள் உள்ள நுண்ணுடல் சூக்கும சரீரம் (அ) யாதனா சரீரம் (அ) ஆவி (அ) உள்ளுடம்பு என அழைக்கப்படுகிறது.
- ஸ்தூலத்திலிருந்து சூக்குமம் பிரிந்து செல்வதை படம்பிடித்தவர் – பாடரக்
- ஸ்தூலசரீரத்தினுள் சூக்குமசரீரமும், சூக்குமசரீரத்தினுள் குணசரீரமும், குணசரீரத்தினுள் கஞ்சுக சரீரமும், கஞ்சுகசரீரத்தினுள் காரண சரீரமும் உள்ளன.
- கனவு காணும் சரீரம் — சூக்கும சரீரம்
- ஸ்தூல உடலைவிட்டு உயிர் பிரியும் நிலை – மரணம்
PDF Download
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்