உடம்பின் வகைகள்
- தத்துவங்களுள் மாயையானது உயிரின் காரண சரீரம் எனப்படும்.
- காலம், நியதி, கலை, வித்தை, அராகம் எனும் ஐந்தின் தொகுதி – கஞ்சுக சரீரம்
(கஞ்சுகம் – சட்டை) எனப்படும். - மூலப்பிரக்ருதியின் முக்குணங்களும் விளங்கி நிற்கும் நிலை – குணசரீரம் ஆகும்.
- காரண, கஞ்சுக, குண ஆகிய மூன்று சரீரமும் சேர்ந்து உயிருக்கு மிக நெருக்கமாய் அமைந்த நிலை – பரசரீரம்.
- பரசரீரத்திற்கு மேல் சூக்கும பூதம் எனப்படும் தன்மாத்திரை ஐந்து, மனம், புத்தி, அகங்காரம் ஆகியவையும் சேர்ந்து அமைவது – அகக்கரணசரீரம்.
- 8 தத்துவங்களால் அகக்கரணசரீரம் அமைந்த நிலை – புரியட்டகம்.
- கனவு நிலையில் நமது உணர்வும், போக நுகர்ச்சியும் உண்டாக காரணமான சரீரத்தின் பெயர் – அகக்கரணசரீரம்.
- ஆயுள் முடிவில் உடலை உயிர்நீத்தபின் பிரிதோர் உடலை எடுக்க காரணமான சரீரம் – அகக்கரணசரீரம்.
- நனவு நிலையில் போக நுகர்ச்சிக்கு காரணமாக அமையும் பருவுடம்பின் பெயர் ஸ்தூலசரீரம்
- காரணசரீரம் – ஆனந்தமயகோசம்
- கஞ்சுக சரீரம் – விஞ்ஞானமயகோசம்
- குணசரீரம் – மனோமயகோசம்
- அகக்கரணசரீரம்(சூட்சும உடல்) – பிராணமயகோசம்
- ஸ்தூல சரீரம் (உயிர்) – அன்னமயகோசம்
- பாசங்கள் நீங்கி நிற்றல் – முதல்வன் இலக்கணம்.
- பாசங்களில் கட்டுண்டு நிற்றல் – உயிர்களின் இலக்கணம்.
- ‘மீளா அடிமை உனக்கே” – என்றுரைத்தவர் நம்பியாரூரர்(சுந்தரர்)
- ‘என்று நீ அன்று நான் உன்னடிமையல்லவோ!” – தாயுமானவர்.
ஆன்மாக்கள்:
- உயிர்களின் தோற்றம் நான்கு. பிறப்பு ஏழு வகை. உருவவேற்றுமை (பேதம்) 84 லட்சம்.
- நான்கு வகை தோற்றம்
அண்டஜம் | முட்டையில் தோன்றுவன. எ.கா. பறவை, ஊர்வன, நீர்வாழ்வன |
ஸ்வேதஜம் | வேர்வையில் தோன்றுவன. எ.கா. கிருமி, பேன் |
உத்பிஜ்ஜம் | வித்து, வேர், கொடி, கிழங்கிலிருந்து தோன்றுவது (தாவரங்கள்) |
சராயுஜம் | கருப்பையில் தோன்றுவன எ.கா. மனிதரும், விலங்குகளும் |
எழுவகை பிறப்புக்களாவன:
பிறப்பு |
உருவவேற்றுமை |
பிறப்பு |
உருவவேற்றுமை |
தேவர் | பதினோரு இலட்சம் | பறவை | பத்து இலட்சம் |
மனிதர் | ஒன்பது இலட்சம் | ஊர்வன | பதினைந்து லட்சம் |
விலங்குகள் | பத்து இலட்சம் | நீர்வாழ்வன | பத்து லட்சம்
|
தாவரம் | பத்தொன்பது லட்சம் |
- தாவரம் என்பது – அசரம் எனவும், நிலையியல் பொருள் எனவும் அழைக்கப்படும்.
- மேற்காணும் ஏனைய பிறப்புப் பொருட்கள் அனைத்தும் சங்கமம் எனவும், சரம் எனவும் அழைக்கப்படும்.
- ‘உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போல பிறப்பு” – திருக்குறள்.
- வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று” – திருக்குறள்.
Pdf Download
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்