TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை TNPSC வெளியிட்டு உள்ளது. இதன் அடிப்படையில் தேர்வர்கள் ஒரு முறை நிரந்தரப் பதிவு கணக்குடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய படுகிறார்கள். மேலும் கொரோனா எதிரொலியாக கடந்த ஒன்றரை வருடங்களாக எந்த ஒரு போட்டி தேர்வும் நடக்கவில்லை. இந்நிலையில் தற்போது நிலைமை சீராகி வருவதால் மீண்டும் போட்டி தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த வகையில் 5529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை TNPSC கடந்த 18ம் தேதி வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் குரூப் 2, குரூப் 2A தேர்வு மே 21ம் தேதி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாலை 5 மணி முதல் காலை 8 மணிவரை இரவு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!
மேலும் TNPSC தற்போது தேர்வர்கள் பயன்பெறும் விதமாக காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு தமிழ் மொழி கட்டாயம் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து TNPSC ஒரு முறை நிரந்தரப் பதிவு (OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்கள் தங்களது ஆதார் குறித்த விவரங்களை இணையதளத்தில் பிப்ரவரி 28ம் தேதி இணைக்க வேண்டும் என்று முன்னதாக TNPSC அறிவித்து இருந்தது.
YouTube, Google மூலம் ரஷ்ய நிறுவனங்களுக்கு கிடைத்த வருவாய் நிறுத்தம் – உக்ரைனுக்கு ஆதரவாக நடவடிக்கை!
ஆனால் தற்போது இந்த OTR பதிவுடன் ஆதாரை இணைப்பதற்கு ஏப்ரல் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து TNPSC அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்நிலையில் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23-ம் தேதி ஆகும். எனவே குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் 23ம் தேதிக்குள் ஆதாரை ஒரு முறை நிரந்தரப் பதிவு உடன் இணைக்க வேண்டும். மேலும் முன்னதாக OTR கணக்குடன் ஆதாரை இணைத்த தேர்வர்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை என்று TNPSC குறிப்பிட்டு உள்ளது.