TNPSC அறநிலையத்துறை, கூட்டுறவுத்துறை வேலைவாய்ப்பு 2022 – முக்கிய அறிவிப்பு!
தமிழக இந்து சமய அறநிலைய துறை மற்றும் கூட்டுறவுத்துறையின் தணிக்கை பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
TNPSC:
தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 22 வகையான போட்டித் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூட்டுறவுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையில் 4 செயல் அலுவலர் நிலை – 1 ஆகிய பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் சட்டம் படிப்புகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். முதல் தாள், இரண்டாம் தாள், மூன்றாம் தாள் என மொத்தம் 3 கட்டமாக தேர்வு நடைபெறும். இந்து அறநிலையத்துறை சட்டங்கள் பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். மூன்றாம் தாளில் பொதுவான சட்டங்கள் பற்றிய வினாக்கள் இடம்பெறும். ஏப்ரல் 23 மற்றும் 24 தேதிகளில் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இணையதளம் வாயிலாக 01.07.2022 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு – புதிய அட்டவணை வெளியீடு!
கூட்டுறவுத்துறையில் 8 தணிக்கை பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.A(Co-operation) (Or) M.Com., with (Co-operation) (Or) M.Com., (without Co-operation) plus Higher Diploma in Co-operation (Or) ICAI படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முதல் தாளில் கூட்டுறவு, வணிகவியல் மற்றும் கணக்கியல் பாடப்பிரிவுகளில் இருந்தும் இரண்டாம் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவு வினாக்களும் இடம் பெறும். ஏப்ரல் 30ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.