TNPSC யின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – 56,000 வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் பற்றி பார்ப்போம்.
தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலமாக நிரப்பி வருகின்றன. இதனை தொடர்ந்து தற்போது TNPSCயின் தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் அறிவித்தபடி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் காலியாக உள்ள கணக்கு அலுவலர் நிலை 3 பணியிடத்தில் தகுதியான நபர்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று நிலவரப்படி, 32 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அத்துடன் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர் உள்ளிட்டவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் நடத்திய இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் தமிழறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும், இப்பணியில் நியமிக்கப்படுவோருக்கு ரூ. 56,900 முதல் ரூ. 2,09,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. இப்பணிக்கான கணினி வழி தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 8ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் சிலிண்டர் விநியோகம்? முக்கிய தகவல்!
மேலும் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் உத்தேசப்பட்டியல் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளம் மூலமாக சென்று பதிவு செய்யலாம். இப்பணிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். ஆனால் இதில் ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர், பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை.