குரூப் 1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !!!!

0

குரூப் 1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !!!!

2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பாக குரூப் 1 பணியிடங்களுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியானது. அதன் பின் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி சென்ற வாரம் முதல்வர் உத்தரவிட்டார்.

பல்துறை வேலைவாய்ப்பு 2020

இதனால் நடப்பாண்டில் ஓய்வுபெற இருந்த அரசு ஊழியர்களின் வயது வரம்பு அதிகரிக்கப்பட்டதால், இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்படும் வேலைவாய்ப்புகள் குறைப்பக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இனி வரக்கூடிய நாட்களிலும் நடைபெற உள்ள தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விகள் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி விளக்கம்:

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டிற்கான, அறிவிக்கப்பட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின், நடப்பாண்டுக்கான புதிய வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்கள் சமூக வலைத்தளங்களில் வரும் நம்பகமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், மேலும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி ஆணையம் அறிவித்துள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!