TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம்( TNPSC) மூலம் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. TNPSC இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் குரூப் 2 தேர்வர்கள் அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.
முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்றின் காரணமாய் கடந்த 2 ஆண்டுகளாக அரசு போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த ஆண்டு TNPSC குரூப் 2 தேர்வு பிப்ரவரி மாதத்திலும், குரூப் 4 தேர்வு மார்ச் மாதத்திலும் நடத்தப்படும் என்று TNPSC தேர்வாணையம் சமீபத்தில் அறிவித்தது. இத்தேர்வை எழுத தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான தேர்வாளர்கள் காத்திருந்த நிலையில் கடந்த ஆண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டதால் தேர்வெழுதும் தேர்வாளர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர்.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வரி விலக்கு சலுகை 14% ஆக உயர்வு!
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர் OTR என்ற ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்கு முறையின்படி இணையதளத்தில் பதிவு செய்து தொடர்ந்து மூன்று முறை தேர்வுகளை எழுதலாம். அதன்படி தற்போது குரூப் 2 தேர்வு எழுதும் தேர்வர்கள்களில் OTR வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் ஆதார் எண் இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது
2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் – அரசு வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “TNPSC தேர்வாணையம் காலத்திற்கு ஏற்றவாறு புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் One Time Registration – OTR கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் விவரங்களை வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைக்க வேண்டும் என்றும் மேலும் இது குறித்து விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால், 18004190958 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என்றும் தெரிவித்துள்ளது.